search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தக்கலையில் வாலிபர் தற்கொலை
    X

    தக்கலையில் வாலிபர் தற்கொலை

    • வியாபாரத்தில் நஷ்டம் ஏற்பட்டதால் மின் விசிறியில் தூக்கு போட்டு தற்கொலை
    • தக்கலை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை

    கன்னியாகுமரி:

    தக்கலை அருகே அப்பட்டுவிளை எழுந்தன்கோட்டு கோணம் பகுதியை சேர்ந்தவர் பகவத் குமார் (வயது31.)

    இவரது மனைவி ஆஷ்மி. இவர்களுக்கு திருமணமாகி 4 ஆண்டுகள் ஆகின்றன. 4 வயதில் பெண் குழந்தை உள்ளது.

    குலசேகரத்தில் மளிகை கடை நடத்தி வந்த பகவத் குமாருக்கு வியாபாரத்தில் நஷ்டம் ஏற்பட்டதால் மது பழக்கத்துக்கு அடிமையானார்.

    இந்த நிலையில் அப்பட்டு விளையில் உள்ள தாயார் வீட்டுக்குச் சென்ற பகவத் குமார் அங்கு மின் விசிறியில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    அவரது மனைவி ஆஷ்மி புகாரின் பேரில் தக்கலை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×