search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மணவாளக்குறிச்சி அருகே கடன் தொல்லையால் பெண் தற்கொலை
    X

    மணவாளக்குறிச்சி அருகே கடன் தொல்லையால் பெண் தற்கொலை

    • கடனை அடைக்க முடியாமல் அவதி
    • மணவாளக்குறிச்சி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை

    கன்னியாகுமரி:

    மணவாளக்குறிச்சி போலீஸ் சரகம் கல்லடிவிளை சிவந்தமண் என்ற இடத்தை சேர்ந்தவர் ராஜன். இவர் வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார். இவருடைய மனைவி பிரபா (வயது 42). இவர்களுக்கு இரண்டு மகள்கள் உள்ளனர். ஒருவருக்கு திருமணம் முடிந்து விட்டது மற்றொரு மகள் வெளியூரில் படித்து வருகிறார். இவருடைய தாத்தா சந்திரன் (76) பிரபாவின் வீட்டு திண்ணையில் உறங்குவது வழக்கம்.

    பிரபா பலரிடம் கடன் பெற்றுள்ளதாகவும் அத னால் கடனை அடைக்க முடியாமல் அவதிப் பட்டு இருந்ததாகவும் கூறப்படு கிறது. சம்பவத்தன்று இரவு வீட்டில் சத்தம் கேட்டதால் திண்ணையில் தூங்கி கொண்டிருந்த சந்திரன் கதவை திறந்து பார்த்தபோது பிரபா தூக்கில் தொங்கிய நிலையில் இருந்தார். உடனடி யாக அக்கம் பக்கத்தினர் உதவியுடன் ஆசாரிப்பள்ளம் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

    அங்கு பரிசோதனை செய்த டாக்டர் அவர் ஏற்கனவே இறந்து விட்டார் என்று கூறினார்.

    இச்சம்பவம் குறித்து போலீசில் புகார் செய்யப் பட்டது. மணவாளக்குறிச்சி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    Next Story
    ×