என் மலர்
உள்ளூர் செய்திகள்

நாகர்கோவில் பகுதியில் போலீசார் வாகன சோதனையால் வியாபாரிகளுக்கு பாதிப்பு
- எஸ்.பி. அலுவலகத்தில் மனு
- வணிக நிறுவனங்கள் இல்லாத பகுதியில் போலீசார் வாகன தணிக்கை செய்ய வேண்டும்.
நாகர்கோவில்:
தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை குமரி மாவட்ட தலைவர் டேவிட்சன் தலைமையில் நிர்வாகிகள் இன்று நாகர்கோவிலில் உள்ள மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்திற்கு வந்து ஒரு மனு அளித்தனர். அந்த மனுவில் கூறப்பட்டிருப்பதாவது:-
குமரி மாவட்டத்தில் 65 கிளை சங்கங்களை கொண்டு எங்களது பேரவை செயல்பட்டு வருகிறது. இந்த நிலையில் செட்டிகுளம் சந்திப்பு பகுதியில் வியாபாரம் நடக்கும் நேரத்தில் போலீசார் 4 முனைகளிலும் அரணாக நின்று வாகன தணிக்கை செய்கிறார்கள்.
இதனால் பொதுமக்கள் அச்சம் காரணமாக அந்த பகுதிக்கு வராமலேயே திரும்பி சென்று விடுகிறார்கள். கோடி கணக்கில் கடன் வாங்கி தொழில் செய்து வரும் வணிகர்களுக்கு இது பெரும் பாதிப்பாக உள்ளது. எனவே வணிக நிறுவனங்கள் இல்லாத பகுதியில் போலீசார் வாகன தணிக்கை செய்ய வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது
Next Story