search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மார்த்தாண்டம் காய்கறிச் சந்தையில் சுமை தூக்கும் தொழிலாளிக்கு அரிவாள் வெட்டு
    X

    மார்த்தாண்டம் காய்கறிச் சந்தையில் சுமை தூக்கும் தொழிலாளிக்கு அரிவாள் வெட்டு

    • சுவாமி தாஸ் குடித்துவிட்டு ஆபாச வார்த்தையால் பேசியவாறு கையில் இருந்த அரிவாளால் ரெத்தின மணியை சரமாரியாக வெட்டியுள்ளார்
    • மார்த்தாண்டம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை

    கன்னியாகுமரி :

    கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டம் போலீஸ் நிலையத்துக்கு உட்பட்ட காட்டுவிளை குளக்கச்சி பகுதியை சேர்ந்தவர் ரெத்தினமணி (வயது62).

    இவர் மார்த்தாண்டம் சந்தையில் சுமைதூக்கும் தொழிலாளராக பணிபுரிந்து வருகிறார்.

    இவர் வீட்டின் அருகாமையில் நின்று கொண்டிருந்தபோது குளக்கச்சி நெடுவிளை பகுதியை சேர்ந்தவர் சுவாமி தாஸ் (52), குடித்துவிட்டு ஆபாச வார்த்தையால் பேசியவாறு கையில் இருந்த அரிவாளால் ரெத்தின மணியை சரமாரியாக வெட்டியுள்ளார்.

    இதனால் பலத்த காயமடைந்த ரத்தின மணியை அக்கம்பக்கத்தினர் மீட்டு குழித்துறை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்து ள்ளனர். இதுகுறித்து மார்த்தாண்டம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இதேபோல மார்த்தா ண்டம் போலீஸ் நிலையத்துக்கு உட்பட்ட குளக்கச்சி நெடுவிளையை சுவாமிதாஸ் (52) என்பவர் மார்த்தாண்டம் காவல் நிலையத்தில் கொடுத்த புகாரில் தான் எலக்ட்சியனாக பணிபுரிந்து வருவதாகவும்,

    வீட்டின் அருகாமையில் நின்றபோது ரெத்தினமணி குடித்துவிட்டு கம்பால் சரமாரியாக தாக்கி முதுகு, நெஞ்சு, உடல் முழுவதும் காயப்படுத்தியதாகவும் இதனால் படுகாயம் அடைந்த மார்த்தா ண்டத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் குறிப்பிட்டு இருந்தார். கொடுத்த புகாரின் பேரில் மார்த்தாண்டம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×