search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    நாகர்கோவிலில் 25, 28-ந்தேதிகளில் மின்தடை
    X

    கோப்பு படம் 

    நாகர்கோவிலில் 25, 28-ந்தேதிகளில் மின்தடை

    • காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை மின் வினியோகம் தடை
    • மின்பாதையில் அவசர பராமரிப்பு பணி மேற்கொள்ளப்படுகிறது

    நாகர்கோவில்:

    நாகர்கோவில் மீனாட்சிபுரம் பிரிவிற்கு உட்பட்ட கணேசபுரம் மின்பாதையில் அவசர பராமரிப்பு பணி மேற்கொள்வதால் செட்டிகுளம் சந்திப்பு, ராஜாக்கமங்கலம் ரோடு, தட்டான்விளை, சற்குணவீதி, வெள்ளாளர் காலனி, மேலராமன்புதூர், ஐ.எஸ்.ஆர்.ஓ. காலனி, சிவன்கோவில் தெரு ஆகிய பகுதிகளில் வருகிற 25-ந் தேதி காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை மின் வினியோகம் தடை செய்யப்படுகிறது.

    இதேபோல் தேரேகால்பு தூர் மின்பாதையில் பராமரிப்பு பணிக்காக மீனாட்சிபுரம் தோப்பு வணிகர் தெரு, மீனாட்சி கார்டன் ஆகிய பகுதிகளில் வருகிற 28-ந் தேதி காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை மின் வினியோகம் நிறுத்தப்படுகிறது. என மீனாட்சிபுரம் மின் வினியோக உதவி செயற்பொறியாளர் தெரிவித்துள்ளார்.

    Next Story
    ×