search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மணவாளக்குறிச்சியில் மின்சாரம் தாக்கி சிறுவன் பலி
    X

    மணவாளக்குறிச்சியில் மின்சாரம் தாக்கி சிறுவன் பலி

    • மணவாளக்குறிச்சி போலீஸ் நிலையத்தில் புகார்
    • போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை

    கன்னியாகுமரி:

    கடியப்பட்டணம் கிறிஸ்து ராஜா தெருவைச் சேர்ந்த ஜேம்ஸ் மகன் நிகிலன் (வயது 15).

    இவர் அதே பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்தார். நேற்று விடுமுறை தினம் என்பதால் இவர் நண்பர்களுடன் மணவா ளக்குறிச்சியில் உள்ள ஐ.ஆர்.இ. குடியிருப்பு வளா கத்தின் மதில் சுவர் ஏறி மறுபக்கம் செல்ல முடிவு செய்துள்ளார். அப்போது எதிர்பாராத விதமாக உயர்மின் அழுத்த மின்சாரம் தாக்கியதில் நிகிலன் தூக்கி வீசப்பட்டான்.

    அவருக்கு முதலுதவி செய்து ஆம்புலன்ஸ் மூலம் ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு அவரை சோதித்த டாக்டர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தார்.

    இதனைத் தொடர்ந்து ஐ.ஆர்.இ. பாதுகாவலர் முரளி மணவாளக்குறிச்சி போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.

    இதன் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×