search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பணகுடி அருகே வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த பெண்ணிடம் நகை பறிப்பு- மர்ம நபர்களுக்கு வலைவீச்சு
    X

    பணகுடி அருகே வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த பெண்ணிடம் நகை பறிப்பு- மர்ம நபர்களுக்கு வலைவீச்சு

    • இந்து தனது 2 குழந்தைகளுடன் பாம்பன்குளத்தில் வசித்து வருகிறார்.
    • வீட்டுக்குள் புகுந்த மர்ம நபர், இந்து தனது கழுத்தில் அணிந்திருந்த 7 பவுன் நகையை பறித்தார்.

    பணகுடி:

    பணகுடி அருகே உள்ள பாம்பன்குளத்தை சேர்ந்தவர் பதிபாலன். இவர் வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி இந்து தனது 2 குழந்தைகளுடன் பாம்பன்குளத்தில் வசித்து வருகிறார்.

    நகை பறிப்பு

    நேற்று இந்துவுக்கு பிறந்தநாள் என்பதால் அதனை குடும்பத்தினர் கொண்டாடிவிட்டு நள்ளிரவில் தூங்க சென்றனர். அப்போது நள்ளிரவில் வீட்டுக்குள் புகுந்த மர்ம நபர், இந்து தனது கழுத்தில் அணிந்திருந்த 7 பவுன் நகையை பறித்தார்.

    உடனே விழித்து க்கொண்ட இந்து, செயினை பிடித்துக்கொண்டார். ஆனால் அதில் 2 பவுன் மட்டுமே அவரது கையில் சிக்கியது. மீதம் உள்ள 5 பவுன் செயினை பறித்து கொண்டு மர்ம நபர் வீட்டின் வெளியே தப்பி சென்றார்.

    அங்கு தயராக நின்று கொண்டிருந்த மற்றொரு மர்ம நபரின் மோட்டார் சைக்கிளில் ஏறி தப்பி சென்றுவிட்டார். இதுதொடர்பாக இந்து பணகுடி போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

    Next Story
    ×