என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
காப்பீட்டு கழக ஊழியர் சங்க மாநாடு
Byமாலை மலர்16 July 2022 10:33 AM GMT
- மாநாட்டில் செயற்குழு அறிக்கை, வரவு செலவு அறிக்கை வாசிக்கப்பட்டது.
- இரண்டாவது நாளாக நடைபெற உள்ள மாநாட்டில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட உள்ளன.
தஞ்சாவூர்:
காப்பீட்டு கழக ஊழியர் சங்க வைர விழா ஆண்டு மாநாடு தஞ்சையில் இன்று தொடங்கியது. இதற்கு தஞ்சை கோட்ட தலைவர் செல்வராஜ் தலைமை தாங்கினார். பொதுச் செயலாளர் சேதுராமன் வரவேற்றார். ஏ.ஐ.ஐ.இ.யூ. பொதுச் செயலாளர் ஸ்ரீகாந்த் மிஸ்ரா தொடக்க உரையாற்றினார். முன்னதாக கலை நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்த மாநாட்டில் செயற்குழு அறிக்கை, வரவு செலவு அறிக்கை வாசிக்கப்பட்டது. அறிக்கை மீதான விவாதங்கள் நடைபெற்றது. தொடர்ந்து மாநாடு நடைபெற்று வருகிறது. நாளை இரண்டாவது நாளாக மாநாடு நடைபெற உள்ளது. அதில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட உள்ளன.
இந்த நிகழ்ச்சியில் இணை செயலாளர் கிரிஜா, முதுநிலை கோட்ட மேலாளர் சுஜீத், எல்.ஐ.சி. முதல் நிலை அதிகாரிகள் சங்க தலைவர் சோழ சுந்தர பாண்டியன், காப்பீட்டு கழக ஊழியர் சங்க பொருளாளர் ரவிசங்கர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X