search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பிளஸ்-1 மாணவி உள்பட   2 பேர் தற்கொலை முயற்சி
    X

    பிளஸ்-1 மாணவி உள்பட 2 பேர் தற்கொலை முயற்சி

    • ஒரு தனியார் பள்ளியில் அக்‌ஷயா (வயது 17) என்ற மாணவி 11-ம் வகுப்பு படித்து வந்தார்.
    • பெற்றோர் கண்டித்ததால் மனமுடைந்த மாணவி விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றார்.

    சேலம்:

    சேலம் செவ்வாய்ப்பேட்டை பகுதியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் அக்‌ஷயா (வயது 17) என்ற மாணவி 11-ம் வகுப்பு படித்து வந்தார். இந்த நிலையில் சரியாக படிக்கவில்லை என்று அவரது பெற்றோர் கண்டித்ததாக கூறப்படுகிறது.

    மாணவி

    இதனால் மனமுடைந்த மாணவி விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றார். இதனை பார்த்த பெற்றோர் அவரை மீட்டு சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து செவ்வாய்ப்பேட்டை போலீ சார் விசாரணை நடத்தி வருகிறார்கள். சேலம் அம்மாப்பேட்டையை சேர்ந்தவர் ரஞ்சித்குமார். இவரது மனைவி விஜய லெட்சுமி . இவர்களுக்கு திருமணமாகி 4 ஆண்டுகள் ஆன நிலையில் குழந்தை கள் இல்லாததால் அவர்களுக்கி டையே தகராறு ஏற்பட்டு வந்தது. இந்த நிலையில் விஜயலெட்சுமி நேற்று விஷம் குடித்து மயங்கி கிடந்தார். இதனை பார்த்த உறவினர்கள் அவரை மீட்டு சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சேர்த்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து அம்மாப்பேட்டை போலீ சார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    Next Story
    ×