என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
திருவாரூரில், தி.மு.க. மகளிர் அணியினர் ஆர்ப்பாட்டம்
- மணிப்பூரில் கலவரம் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
- 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர்.
திருவாரூர்:
மணிப்பூரில் இரு சமூகத்தினர் இடையே தொடர்ச்சியாக நடைபெற்று வரும் கலவரம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது கலவரத்தின் உச்சகட்டமாக பெண்கள் வன்கொடுமை தாக்குதலுக்கும் பாலியல் துன்புறுத்தலுக்கும் உள்ளாகி வருகின்றனர்.
அதன் வெளிப்பாடாக இரண்டு பெண்கள் பாலியல் துன்புறுத்தல்கள் செய்த கும்பல் அதனை சமூக வலைத்தளத்திலும் பரவச் செய்துள்ளது.
இத்தகைய சம்பவத்துக்கு நாடு முழுவதும் எதிர்ப்பு கிளம்பிய நிலையில் எதிர்க்கட்சியினர் மற்றும் பல்வேறு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்
அந்த வகையில் திருவாரூர் புதிய ரயில் நிலையம் எதிரில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் மகளிர் அணி சார்பில் திருவாரூர் சட்டமன்ற உறுப்பினரும் மாவட்ட கழகச் செயலாளருமான பூண்டி கலைவாணன் தலைமையில் 2000த்திற்கும் மேற்பட்ட மகளிர் அணியினர் கலந்து கொண்டு மணிப்பூரில் நடைபெற்று வரும் அநீதியை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
மேலும் பெண்கள் மீது பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்ட சம்பந்தப்பட்ட வீடியோ பதிவில் உள்ள அனைவரும் கைது செய்ய வேண்டும் கலவரத்தை கட்டுப்படுத்த தவறிய மத்திய அரசு இத்தகைய சம்பவங்களுக்கு பொறுப்பேற்க வேண்டும் உள்ளிட்ட கண்டன கோஷங்களை எழுப்பினர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்