search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பருவதனஅள்ளி கிராமத்தில்  மருத்துவ சிறப்பு முகாம்
    X

    பருவதனஅள்ளி கிராமத்தில் மருத்துவ சிறப்பு முகாம்

    • தொற்றா நோய்களுக்கான ஒட்டுமொத்த நோய் கண்டறியும் சிறப்பு முகாம் நடைபெற்றது.
    • முகாமினை பென்னாகரம் வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் ஜெயச்சந்திரபாபு தொடங்கி வைத்தார்.

    பென்னாகரம்,

    தருமபுரி மாவட்டம், பென்னாகரம் வட்டம், பருவதனஅள்ளி ஊராட்சி பருவதனஅள்ளி கிராமத்தில் பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்து துறை நாகதசாம்பட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையம் சார்பாக தொற்றா நோய்களுக்கான ஒட்டுமொத்த நோய் கண்டறியும் சிறப்பு முகாம் நடைபெற்றது.

    முகாமினை பென்னாகரம் வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் ஜெயச்சந்திரபாபு தொடங்கி வைத்தார்.

    இந்த முகாமில் மருத்துவ அலுவலர் டாக்டர் உமா மகேஸ்வரி மற்றும் பகுதி சுகாதார செவிலியர், சுகாதார ஆய்வாளர்கள், செவிலியர்கள், கிராம சுகதார செவிலியர்கள் மற்றும் தூய்மை பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×