search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கிராம சபை கூட்டத்தில்  வீடு  இல்லாதவர்களின்  விபரங்களை சேகரிக்க  உத்தரவு
    X

    கிராம சபை கூட்டத்தில் வீடு இல்லாதவர்களின் விபரங்களை சேகரிக்க உத்தரவு

    • குடியிருப்பு வசதியை ஏற்படுத்தி தருவது தொடர்பான நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும் எனவும் கூறப்பட்டுள்ளது.
    • நிலமற்ற ஏழைகளுக்கு வழங்குவது தொடர்பாக விவாதித்து தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் எனவும் அந்த உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

    அவிநாசி

    நாளை ஊராட்சிகளில் கிராம சபை கூட்டம் நடத்தப்படுகிறது. இதில் கிராமப்புற சுகாதாரம், வேலை வாய்ப்பு, கட்டமைப்பு உள்ளிட்ட பணிகளில் கவனம் செலுத்த வேண்டும் என ஊராட்சிகளின் இயக்குனர் உத்தரவிட்டுள்ளார். இதில் பிரதமரின் ஆவாஸ் பிளஸ் திட்டத்தில் நிலமற்ற ஏழை, எளியோருக்கு குடியிருப்பு வசதியை ஏற்படுத்தி தருவது தொடர்பான நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும் எனவும் கூறப்பட்டுள்ளது.

    கிராம ஊராட்சிகளுக்கு சொந்தமான பொதுநிலங்கள் மற்றும் பயன்படுத்தப்படாத ஆதி திராவிட நலத்துறை மற்றும் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை சார்பில் ஒப்படைக்கப்பட்ட நிலங்களை கண்டறிந்து அந்த இடத்தை நிலமற்ற ஏழைகளுக்கு வழங்குவது தொடர்பாக விவாதித்து தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் எனவும் அந்த உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

    Next Story
    ×