search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மண் சரிவு ஏற்பட்ட பகுதிகளில் இருசக்கர வாகனத்தில் சென்று கலெக்டர் கார்மேகம் ஆய்வு இரவு போக்குவரத்து ரத்து என அறிவிப்பு
    X

    ஆய்வுக்காக ஸ்கூட்டரில் சென்ற கலெக்டர் கார்மேகம்.

    மண் சரிவு ஏற்பட்ட பகுதிகளில் இருசக்கர வாகனத்தில் சென்று கலெக்டர் கார்மேகம் ஆய்வு இரவு போக்குவரத்து ரத்து என அறிவிப்பு

    • இதுவரை இல்லாத அளவிற்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதால் ஏற்காடு சேலம் சாலையில் போக்குவரத்து சுமார் 3 நாட்களுக்கு நிறுத்தப்படலாம்.
    • நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

    சேலம்:

    ஏற்காடு மலைப்பாதையில் மண் சரிவு ஏற்பட்ட பகுதிகளில் 10-க்கும் மேற்பட்ட பொக்லைன் மற்றும் ஜே.சி.பி. எந்திரம் மூலம் பாறைகள் மற்றும் கற்களை அப்புறப்படுத்தி வருகின்றனர். இதுவரை இல்லாத அளவிற்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதால் ஏற்காடு சேலம் சாலையில் போக்குவரத்து சுமார் 3 நாட்களுக்கு நிறுத்தப்படலாம் என்று நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

    மண் சரிவு ஏற்பட்ட பகுதிகளை கலெக்டர் கார்மேகம் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார், மேலும் பாதிப்பு அதிகமாக இருந்த காரணத்தினால் வாகனத்தில் செல்ல முடியாததால் கலெக்டர் சிறிது தூரம் நடந்தே சென்று பாதிக்கப்பட்ட இடத்தை பார்வையிட்டார்.

    சாய்ந்து கிடந்த மர கிளைகளை அவரே அப்புறப்படுத்தினார், பின்னர் எதிரே இருந்த இரு சக்கர வாகனத்தை எடுத்துக்கொண்டு மலைப் பாதையில் எங்கு எங்கு பாதிப்பு ஏற்பட்டு உள்ளது என ஏற்காடு வரை சென்று பார்வையிட்டார். பின்னர் அவர் கூறுகையில், நெடுஞ்சாலைத் துறையினர் மற்றும் வருவாய் துறையினர் இணைந்து பாதிக்கப்பட்ட பகுதிகளை சீர் செய்து வருகின்றனர். சீர் செய்யப்பட்டாலும் சாலையில் வழிந்தோடும் மழை நீர் நின்றவுடன் போக்குவரத்து அனுமதிக்கப்படும். மழை காலம் முடியும் வரை எந்த நேரத்திலும் மண் சரிவு ஏற்பட வாய்ப்புள்ளதால் இரவு 9 மணிமுதல் காலை 6 மணி வரை ஏற்காடு மலைப்பாதையில் போக்குவரத்து நிறுத்தப்படும் என தெரிவித்தார்.

    Next Story
    ×