கும்மிடிப்பூண்டியில் கடையை உடைத்து பொருட்கள் கொள்ளை

கும்மிடிப்பூண்டியில் கடையை உடைத்து பொருட்கள் கொள்ளையடித்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கும்மிடிப்பூண்டியில் கடையை உடைத்து பொருட்கள் கொள்ளை
Published on

கும்மிடிப்பூண்டி:

கும்மிடிப்பூண்டி மா.பொ.சி.நகரில் வசித்து வருபவர் மார்டீன் (வயது 52). கும்மிடிப்பூண்டி பைபாஸ் சாலையில் எலக்ட்ரிக்கல் மற்றும் மோட்டார் ரீவைண்டீங் கடை நடத்தி வருகிறார்.

நேற்று நள்ளிரவு கடையின் இரும்பு ஷெட்டர் பூட்டை உடைத்து உள்ளே புகுந்த மர்ம ஆசாமி அங்கு வைக்கப்பட்டிருந்த காப்பர் வயர் பண்டல்களை திருடிச் சென்றான். திருட்டு போன பொருட்களின் மொத்த மதிப்பு ரூ.3 லட்சம் ஆகும். சி.சிடி.வி. கேமிராவில், மர்ம ஆசாமி நள்ளிரவில் பூட்டை உடைத்து உள்ளே வருவதும், பொருட்களை திருடுவதும் பதிவாகி உள்ளது. இந்த திருட்டு சம்பவம் குறித்து கும்மிடிப்பூண்டி சிப்காட் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com