search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கோவையில் இன்று 247 மையங்களில் குரூப்-4 தேர்வு
    X

    கோவையில் இன்று 247 மையங்களில் குரூப்-4 தேர்வு

    • தேர்வினையொட்டி பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.
    • தேர்வு மையத்துக்கு செல்ல அரசு சிறப்பு பஸ்களை இயக்கியது.

    கோவை,

    தமிழ்நாடு அரசு தேர்வாணையம் சார்பில் (குரூப்-4) தேர்வு இன்று நடைபெற்றது.

    கோவை மாவட்டத்தில் 247 தேர்வு மையங்களில் காலை 9.30 மணி முதல் மதியம் 12.30 மணிவரை நடைபெற்றது. இந்த தேர்வை 77,020 பேர் எழுத பதிவு செய்திருந்தனர்.

    தேர்வாளர்கள் நுழைவு சீட்டை அரசு பணியாளர் தேர்வாணைய இணைய தளத்தில் பதிவிறக்கம் செய்து தேர்வு மையத்தை தெரிந்து கொண்டனர். தேர்வு மையத்துக்கு செல்ல அரசு சிறப்பு பஸ்களை இயக்கியது. தேர்வை சிறப்பாக நடத்துவதற்காக 24 மொபைல் அலுவலர்கள், 247 தேர்வுக்கூட ஆய்வு அலுவலர்கள், துணை கலெக்டர் அந்தஸ்தில் 12 கண்காணிப்பு அதிகாரிகள், 17 பறக்கும் படை அதிகாரிகள் நியமனம் செய்யப்பட்டு இருந்தனர்.

    மாவட்ட கலெக்டர், மாவட்ட வருவாய் அதிகாரி நிலையில் மாவட்ட அளவிலான ஆய்வு குழு அமைக்கப்பட்டு இருந்தது. காலை 9 மணிக்கு பிறகு வந்த தேர்வர்கள் யாரும் தேர்வுகூடத்துக்குள் நுழைய அனுமதிக்கப்படவில்லை. விடைத்தாளில் விவரங்க ளை பூர்த்தி செய்யவும், விடைகளை குறிக்கவும் கருப்பு நிறம் கொண்ட பந்துமுனைப் பேனாவை மட்டுமே பயன்படுத்த அனுமதிக்கப்பட்டனர்.

    பென்சில் மற்றும் ஏனைய நிற பேனாக்களை பயன்படுத்த அனுமதிக்க வில்லை. விடைத்தாளில் இரு இடங்களில் கையொப்பமிட்டு, இடதுகை பெருவிரல் ரேகையினை பதிவு செய்தனர்.

    தேர்வர்கள் தேர்வு தாளை சரியாக செய்துள்ளனரா? என்று உறுதி செய்து கொள்ள ஒவ்வொரு தேர்வருக்கும் தேர்வு முடிந்த பின்னர் 15 நிமிடங்கள் கூடுதல்லாக வழங்கப்பட்டது.

    அதாவது 12.30 மணி முதல் 12.45 மணி வரை இந்த செயல்பாட்டை முடித்து விடைத்தாளை தேர்வு அறை கண்காணிப்பாளரிடம் ஒப்படைத்தனர்.

    மொபைல் போன், எலெக்டிரானிக் கடிகாரம் உள்ளிட்ட மின்னணு சாதனங்களை தேர்வர்கள் தேர்வுக்கு கொண்டு செல்ல அனுமதிக்கப்படவில்லை. அனைத்து மையங்களிலும் கொரோனா தடுப்பு நடவடிகைகள் மேற்கொள்ளப்பட்டது. பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.

    Next Story
    ×