search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    அரசு பஸ் டீசல் டேங்க் வெடித்து  தொழிலாளி படுகாயம்
    X

    அரசு பஸ் டீசல் டேங்க் வெடித்து தொழிலாளி படுகாயம்

    • டீசல் டேங்க் -ஐ துண்டிக்கும் முயற்சியில் ஈடுபட்டார். அப்போது எதிர்பாராதவிதமாக அந்த டீசல் டேங்க் வெடித்தது.
    • உடனே அங்கு விரைந்து சென்ற தீயணைப்பு வீரர்கள் தீயை அணைத்தனர் .இதனால் அக்கம் பக்கம் தீ வராமல் தடுக்கப்பட்டது.

    கொண்டலாம்பட்டி:

    சேலம்- சென்னை தேசிய நெடுஞ்சாலை சன்னியாசிகுண்டு அருகே உள்ள பகுதியில் விஜயகுமார் (வயது 45) என்பவர் பழைய பஸ் லாரிகளை வாங்கி, உடைக்கும் பட்டறை வைத்து நடத்தி வருகிறார். இவரது பட்டறையில் இன்று காலை 11.30 மணி அளவில் பழைய அரசு பேருந்தை வாங்கி வந்து உடைக்கும் பணியில் தொழிலாளர்கள் ஈடுபட்டு வந்தனர்.

    ஓமலூர் அருகே உள்ள தண்ணீர்தொட்டி நாரன்பாளையம் பகுதியை சேர்ந்த பங்க்ராஜ் (50) என்ற தொழிலாளி கியாஸ் கட்டிங் மூலம் அந்த பேருந்தின் டீசல் டேங்க் -ஐ துண்டிக்கும் முயற்சியில் ஈடுபட்டார். அப்போது எதிர்பாராதவிதமாக அந்த டீசல் டேங்க் வெடித்தது. மேலும் டேங்க் முழுவதும் தீ பற்றி எரிந்தது.இதில் படுகாயம் அடைந்த பங்க்ராஜ் அலறி துடித்தார்.அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு சேலம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.

    இது குறித்து ஊழியர்கள் செவ்வாய்பேட்டை தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர். உடனே அங்கு விரைந்து சென்ற தீயணைப்பு வீரர்கள் தீயை அணைத்தனர் .இதனால் அக்கம் பக்கம் தீ வராமல் தடுக்கப்பட்டது.

    உடல், கை, கால், முகம் போன்ற பகுதிகளில் தீக்காய மடைந்த பங்க்ராஜ் -க்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து கிச்சிப்பாளையம் போலீசார் விசாரணை நடத்தி வரு கிறார்கள்.

    Next Story
    ×