search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சாலைகளில் சுற்றித்திரியும் ஆடு, மாடுகளை அப்புறப்படுத்த வேண்டும்
    X

    சாலைகளில் சுற்றித்திரியும் ஆடு, மாடுகளை அப்புறப்படுத்த வேண்டும்

    • தெருவோர வியாபாரிகளை பாதுகாக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
    • வங்கிகளில் தமிழ் பேச தெரிந்தவர்களை வங்கி மேலாளராக நியமனம் செய்ய வேண்டும்.

    பேராவூரணி:

    தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணியில் தெரு வியாபாரிகள் சங்க ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு ஆறுமுகம் தலைமை வகித்தார். செல்வராஜ் முன்னிலை வகித்தார்.

    சங்க உறுப்பினர்கள் அனைவருக்கும் நல வாரிய அட்டை பெற்றுத்தர நடவடிக்கை எடுப்பது, சங்க உறுப்பினர்களுக்கு வங்கியின் மூலம் கடன் பெற்று கொடுக்க ஏற்பாடு செய்வது, தெருவோரம் வியாபாரிகளை பாதுகாக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். பேராவூரணி நகரில் சுற்றித் திரியும் ஆடு, மாடுகளை அப்புறப்படுத்த பேரூராட்சி நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    பேராவூரணி நகரில் இயங்கி வரும் தேசிய மயமா க்கப்பட்ட வங்கிகளில் தமிழ் பேசத் தெரிந்தவர்களை வங்கி மேலாளராக நியமனம் செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.கூட்டத்தில் ஏஐடியுசி பொறுப்பாளர் முருகேசன், சித்திரவேல், நீலகண்டன், வசந்தா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×