search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    வேடசந்தூர் குப்பை கிடங்கில் பயங்கர தீ
    X

    வேடசந்தூர் குப்பை கிடங்கில் தீப்பற்றி எரிவதை படத்தில் காணலாம்.

    வேடசந்தூர் குப்பை கிடங்கில் பயங்கர தீ

    • வேடசந்தூர் பேரூராட்சியின் குப்பை கிடங்கு மாரம்பாடி ரோட்டில் உள்ளது.
    • திடீரென தீ பற்றி கொழுந்து விட்டு எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

    திண்டுக்கல்:

    திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் பேரூராட்சியின் குப்பை கிடங்கு மாரம்பாடி ரோட்டில் உள்ளது. சுமார் 3 ஏக்கர் பரப்பளவில் செயல்படும் இந்த குப்பை கிடங்கில் வேடசந்தூர் பேரூராட்சியின் 15 வார்டுகளிலும் சேகரிக்கப்படும் குப்பைகள் இங்கு தரம் பிரிக்கப்பட்டு கொட்டி வைக்கப்படும்.

    இந்த குப்பை கிடங்கின் பின் பகுதியில் ஏராளமான குப்பைகள் குவிக்கப்பட்டு இருந்த நிலையில் நேற்று இரவு திடீரென தீ பற்றி தீ கொழுந்து விட்டு எரிந்தது.

    இதனால் ஏற்பட்ட கரும்புகை காமராஜர்நகர், மைனர் காலனி, வசந்தா நகர், ஆகிய பகுதிகளில் உள்ள வீடுகளுக்குள் புகுந்தது. இந்தப் புகையின் காரணமாக மக்கள் பெரிதும் அவதிப்பட்டனர்.

    குப்பை கிடங்கில் காம்பவுண்ட் பூட்டப்பட்டிருந்ததால் தீயை அணைக்க தீயணைப்பு துறையினரும் செல்ல முடியவில்லை. எனவே அடிக்கடி ஏற்படும் தீ விபத்தை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    Next Story
    ×