என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
வேடசந்தூர் குப்பை கிடங்கில் பயங்கர தீ
- வேடசந்தூர் பேரூராட்சியின் குப்பை கிடங்கு மாரம்பாடி ரோட்டில் உள்ளது.
- திடீரென தீ பற்றி கொழுந்து விட்டு எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
திண்டுக்கல்:
திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் பேரூராட்சியின் குப்பை கிடங்கு மாரம்பாடி ரோட்டில் உள்ளது. சுமார் 3 ஏக்கர் பரப்பளவில் செயல்படும் இந்த குப்பை கிடங்கில் வேடசந்தூர் பேரூராட்சியின் 15 வார்டுகளிலும் சேகரிக்கப்படும் குப்பைகள் இங்கு தரம் பிரிக்கப்பட்டு கொட்டி வைக்கப்படும்.
இந்த குப்பை கிடங்கின் பின் பகுதியில் ஏராளமான குப்பைகள் குவிக்கப்பட்டு இருந்த நிலையில் நேற்று இரவு திடீரென தீ பற்றி தீ கொழுந்து விட்டு எரிந்தது.
இதனால் ஏற்பட்ட கரும்புகை காமராஜர்நகர், மைனர் காலனி, வசந்தா நகர், ஆகிய பகுதிகளில் உள்ள வீடுகளுக்குள் புகுந்தது. இந்தப் புகையின் காரணமாக மக்கள் பெரிதும் அவதிப்பட்டனர்.
குப்பை கிடங்கில் காம்பவுண்ட் பூட்டப்பட்டிருந்ததால் தீயை அணைக்க தீயணைப்பு துறையினரும் செல்ல முடியவில்லை. எனவே அடிக்கடி ஏற்படும் தீ விபத்தை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்