search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பள்ளி வளாகங்களை தூய்மைப்படுத்த நிதி வசூலிக்க கூடாது- மாவட்ட கலெக்டர்களுக்கு தலைமை செயலாளர் கடிதம்
    X
    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்

    பள்ளி வளாகங்களை தூய்மைப்படுத்த நிதி வசூலிக்க கூடாது- மாவட்ட கலெக்டர்களுக்கு தலைமை செயலாளர் கடிதம்

    • பள்ளிகளில் மாணவருக்கு நல்ல சுற்றுப்புறத்தை அளிக்க தூய்மையாக பள்ளிகளை பராமரிக்க வேண்டும்.
    • கட்டிடம் மற்றும் இருக்கைகள் பழுது பார்க்கப்பட்டு வண்ணம் தீட்டி நல்ல முறையில் இருக்க வேண்டும்.

    சென்னை:

    தலைமை செயலாளர் இறையன்பு அனைத்து மாவட்ட கலெக்டர்களுக்கும் எழுதி உள்ள கடிதத்தில் குறிப்பிட்டு இருப்பதாவது:-

    நீண்ட இடைவெளிக்குப் பிறகு வருகிற 13-ஆம் தேதி பள்ளிகள் திறப்பதால் பள்ளிகளில் தீவிர தூய்மை பணிகளை மேற்கொள்ள நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

    பள்ளிகளில் மாணவருக்கு நல்ல சுற்றுப்புறத்தை அளிக்க தூய்மையாக பள்ளிகளை பராமரிக்க வேண்டும்

    வகுப்பறைகள் மற்றும் கரும்பலகைகள் தூய்மையாக இருக்க வேண்டும். கழிவறைகள் சுத்தமாக இருக்க வேண்டும். கதவுகள் சரி செய்யப்பட்டு இருக்க வேண்டும்.

    ஆய்வரங்குகளில் தேவையான பழுது பார்க்கும் பணியை மேற்கொண்டு ஆய்வகங்களை தூய்மையாக வைத்திருக்க வேண்டும்.

    கட்டிடம் மற்றும் இருக்கைகள் பழுது பார்க்கப்பட்டு வண்ணம் தீட்டி நல்ல முறையில் இருக்க வேண்டும்.

    கடந்த இரண்டு ஆண்டுகளாக குழந்தைகள் எந்தவித உடற்பயிற்சியும் இல்லாமல் இருந்து வருகின்றனர்.

    எனவே விளையாட்டு மைதானம் குழந்தைகள் விளையாடும் அளவுக்கு தயார் நிலையில் இருக்க வேண்டும்.

    குடிநீரில் சரியான அளவு குளோரின் கலந்து இருக்க வேண்டும்.

    பள்ளி கட்டிடம் மற்றும் மதிய உணவு கூடம் ஆகியவை தூய்மைபடுத்தப்பட்டு வெள்ளையடித்து இருக்க வேண்டும்.

    பெற்றோர் ஆசிரியர் சங்கத்துடன் இணைந்து இந்த பணிகளை தீவிரமாக மேற்கொள்ள வேண்டும்.

    தன்னார்வலர்கள் வந்தாலும் தூய்மை பணிக்கு சேர்த்துக் கொள்ளலாம். பள்ளி வளாகங்களை தூய்மைப்படுத்த நிதி வசூலிக்க கூடாது.

    பல தலைமை ஆசிரியர்கள் பள்ளிகளை தூய்மைப்படுத்தும் பணியை மிகவும் சிறப்பாக மேற்கொண்டு வருகிறார்கள் என்பது அறிந்ததே.

    பல தலைமை ஆசிரியர்கள் பள்ளிகளை தங்களின் வீடுகளை போன்று தூய்மையாக வைத்துக் கொள்கிறீர்கள்.

    இது போன்று சிறப்பாக செயல்படும் பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு சுதந்திர தின விழாவில் விருதுகள் வழங்கப்படும்.

    இவ்வாறு அதில் தலைமை செயலாளர் இறையன்பு எழுதி உள்ளார்.

    Next Story
    ×