search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மாற்றுத்திறனாளிகளுக்கு   அடையாள அட்டை வழங்கும் முகாம்
    X

    மாற்றுத்திறனாளிகள் பலர் கலந்து கொண்டனர்.

    மாற்றுத்திறனாளிகளுக்கு அடையாள அட்டை வழங்கும் முகாம்

    • மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் மகிழ்நன் தலைமையில் மாற்றுத் திறனாளிகள் தனித்துவ அடையாள அட்டைக்கான விண்ணப் பம் பெறும் முகாம் நடை பெற்றது.
    • இந்த முகாமை ஏற்காடு மகளிர் திட்ட ஒருங்கிணைப்பாளர் சிலம்பரசன் ஏற்பாடு செய்திருந்தார்.

    ஏற்காடு:

    சேலம் மாவட்டம் ஏற்காட்டில் நேற்று மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் மகிழ்நன் தலைமையில் மாற்றுத் திறனாளிகள் தனித்துவ அடையாள அட்டைக்கான விண்ணப் பம் பெறும் முகாம் நடை பெற்றது. இந்த முகாமை ஏற்காடு மகளிர் திட்ட ஒருங்கிணைப்பாளர் சிலம்பரசன் ஏற்பாடு செய்திருந்தார்.

    இந்த முகாமில் ஏற்காடு மலை கிராமங்களை சேர்ந்த 65 மாற்றுத்திறனாளிகள் அடையாள அட்டைக்கான விண்ணப்பங்களை கொடுத்தனர். அதனை தொடர்ந்து மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் மகிழ்நன் அந்த விண்ணப்பங்களின் ஆவணங்களை முகாமிலேயே சரிபார்த்து அடையாள அட்டை வழங்குவதற்கான ஒப்புதலும் வழங்கினார்.

    மேலும் முகாமில் விண்ணப்பம் கொடுத்த அனைவருக்கும் சில நாட்களில் அடையாள அட்டை வழங்கப்படும் என்று அவர் தெரிவித்தார்.

    Next Story
    ×