search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    குமாரபாளையம் வெள்ளத்தால் பாதித்த மக்களுக்கு  சுகாதார துறை இயக்குநர் ஆறுதல்
    X

    வெள்ளம் பாதித்த பகுதிகளை சுகாதார துறை இயக்குனர் செல்வவிநாயகம் பார்வையிட்ட காட்சி.

    குமாரபாளையம் வெள்ளத்தால் பாதித்த மக்களுக்கு சுகாதார துறை இயக்குநர் ஆறுதல்

    • குமாராபாளையம் காவிரி ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுவதால் அப்பகுதிகளில் உள்ள வீடுகளில் தண்ணீர் புகுந்தது.
    • வெள்ள பாதிப்புகளை மாநில பொது சுகாதார துறை இயக்குனர் செல்வவிநாயகம் பார்வையிட்டார்.

    குமாராபாளையம்:

    குமாராபாளையம் காவிரி ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுவதால் அப்பகுதிகளில் உள்ள வீடுகளில் தண்ணீர் புகுந்தது. இதன்காரணமாக காவிரி கரையோரத்தில் வசிக்கும் பொதுமக்கள் பாதுகாப்பு மையங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். வெள்ள பாதிப்புகளை மாநில பொது சுகாதார துறை இயக்குனர் செல்வவிநாயகம் பார்வையிட்டார்.

    மேலும் பாதிக்கப்பட்ட பொதுமக்கள் தங்க வைக்கப்பட்டிருக்கும் மையத்திற்கு சென்று ஆறுதல் கூறி, அவர்களுக்கு செய்து கொடுத்துள்ள சுகாதார பணிகள் குறித்து உடன் வந்த டாக்டர்களிடம் கேட்டறிந்தார். அப்போது நகராட்சி சுகாதார அலுவலர் ராமமூர்த்தி, கிராம நிர்வாக அலுவலர் முருகன், தியாகராஜன், செந்தில்குமார் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.

    Next Story
    ×