search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    விருகம்பாக்கத்தில் வங்கியில் தீ விபத்து
    X

    விருகம்பாக்கத்தில் வங்கியில் தீ விபத்து

    • விருகம்பாக்கம் ஏ.வி.எம் அவின்யூ மற்றும் தாங்கல் தெரு சந்திப்பில் “பாங்க் ஆப் பரோடா” வங்கி செயல்பட்டு வருகிறது.
    • தீ விபத்தில் குளிர்சாதன பெட்டி, மின்விசிறி மற்றும் கேஷியர் அறை ஆகியவை தீயில் கருகி நாசமானது.

    போரூர்:

    விருகம்பாக்கம் ஏ.வி.எம் அவின்யூ மற்றும் தாங்கல் தெரு சந்திப்பில் "பாங்க் ஆப் பரோடா" வங்கி செயல்பட்டு வருகிறது.

    இன்று அதிகாலை 3 மணி அளவில் வங்கியில் இருந்து கரும்புகை வெளியேறியது. இதனை கண்ட அவ்வழியே சென்ற பொதுமக்கள் உடனடியாக விருகம்பாக்கம் போலீசுக்கும் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர்.

    விருகம்பாக்கம், கோயம்பேடு, கீழ்ப்பாக்கம் ஆகிய பகுதிகளில் இருந்து 3 வாகனங்களில் விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் வங்கி ஷட்டர் கதவை உடைத்து உள்ளே சென்று தீயை அனைத்தனர்.

    இதில் அங்கிருந்த குளிர்சாதன பெட்டி, மின்விசிறி மற்றும் கேஷியர் அறை ஆகியவை தீயில் கருகி நாசமானது. மின் கசிவால் இந்த தீ விபத்து ஏற்பட்டதா அல்லது வேறு ஏதும் காரணமா? என்று பல்வேறு கோணத்தில் அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளை கொண்டு போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×