என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
கர்நாடகாவில் இருந்து தூத்துக்குடி, நெல்லைக்கு பண்டிகை கால சிறப்பு ரெயில்கள்
- நெல்லை மற்றும் மைசூர் - தூத்துக்குடி இடையே சிறப்பு ரெயில்களை இயக்க ரெயில்வே நிர்வாகம் ஏற்பாடு செய்துள்ளது.
- மைசூரில் இருந்து மதியம் 12.05 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 5 மணிக்கு தூத்துக்குடி வந்து சேரும்.
நெல்லை:
பண்டிகை கால கூட்ட நெரிசலை தவிர்க்க எஸ்வந்த்பூர் (பெங்களூரு) - நெல்லை மற்றும் மைசூர் - தூத்துக்குடி இடையே சிறப்பு ரெயில்களை இயக்க ரெயில்வே நிர்வாகம் ஏற்பாடு செய்துள்ளது.
அதன்படி, எஸ்வந்த்பூர் -நெல்லை சிறப்பு ரெயில்(06565) வருகிற 4 மற்றும் 11 -ந் தேதி செவ்வாய்க்கிழமைகளில் எஸ்வந்த்பூரில் இருந்து மதியம் 12.45 மணிக்கு புறப்பட்டு மறுநாள் அதிகாலை 04.30 மணிக்கு நெல்லை வந்து சேரும்.
மறுமார்க்கத்தில் நெல்லை - எஸ்வந்த்பூர் சிறப்பு ரெயில் (06566) வருகிற 5 மற்றும் 12 ஆகிய புதன்கிழமைகளில் நெல்லையில் இருந்து காலை 10.40 மணிக்கு புறப்பட்டு இரவு 11.30 மணிக்கு எஸ்வந்த்பூர் சென்றடையும்.
இந்த ரெயில்கள் பனஸ்வாடி, கார்மேலரம், ஓசூர், தர்மபுரி, சேலம், நாமக்கல், கரூர், திருச்சி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், கோவில்பட்டி ஆகிய ரெயில் நிலை யங்களில் நின்று செல்லும்.
ரெயில்களில் 2 குளிர் சாதன இரண்டடுக்கு படுக்கை வசதி பெட்டிகள், 4 குளிர்சாதன மூன்றடுக்கு படுக்கை வசதி பெட்டிகள், 11 இரண்டாம் வகுப்பு படுக்கை வசதி பெட்டிகள், ஒரு சமையல் பெட்டி ஆகியவை இணைக்கப்படும்.
மைசூர் - தூத்துக்குடி சிறப்பு ரெயில்
மைசூர் தூத்துக்குடி சிறப்பு கட்டண ரெயில் (06253) இன்று மைசூரில் இருந்து மதியம் 12.05 மணிக்கு புறப்பட்டு மறுநாள் நாளை 5 மணிக்கு தூத்துக்குடி வந்து சேரும்.
மறு மார்க்கத்தில் தூத்துக்குடி - மைசூர் சிறப்பு கட்டண ரெயில் (06254) நாளை மாலை 3 மணிக்கு புறப்பட்டு மறுநாள் மதியம் 12.25 மணிக்கு மைசூர் சென்றடையும்.
இந்த ரெயில்கள் எலியூர், மாண்டியா, பெங்களூர், பெங்களூர் கண்டோன்மென்ட், ஓசூர், தர்மபுரி, சேலம், நாமக்கல், கரூர், திண்டுக்கல், மதுரை, விருதுநகர், கோவில்பட்டி ஆகிய ரெயில் நிலையங்களில் நின்று செல்லும்.
இந்த ரெயில்களில் ஒரு குளிர்சாதன 2 அடுக்கு படுக்கை வசதி பெட்டி, 3 குளிர்சாதன மூன்றடுக்கு படுக்கை வசதி பெட்டிகள், 10 இரண்டாம் வகுப்பு படுக்கை வசதி பெட்டிகள், 2 மாற்று திறனாளிகளுக்கான சிறப்பு பெட்டிகள் இணைக்கப்படும்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்