search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சேலத்தில் பெண் தற்கொலை முயற்சி
    X

    சேலத்தில் பெண் தற்கொலை முயற்சி

    • 4 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது.
    • உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

    சேலம்:

    சேலம் அம்மாபேட்டை அருகே உள்ள குமரகிரிபேட்டை பகுதியைச் சேர்ந்தவர் சசிதரன். ( வயது 34). இவருக்கும் நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு அருகே உள்ள கூட்டப்பள்ளி பகுதியை சேர்ந்த புவனாஸ்ரீ ( 30) என்ற பெண்ணுக்கும் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இந்த தம்பதியின் 3 வயது மகன் அந்த பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் எல்கேஜி படித்து வருகிறான்

    சசிதரன் வீட்டிலிருந்தபடியே ஐடி கம்பெனியில் வேலை பார்த்து வருகிறார். இந்த நிலையில் இன்று காலை கவியுகனை பள்ளிக்கு அனுப்புவதற்கு புவனாஸ்ரீ தயார்படுத்திக் கொண்டிருந்தார். பள்ளிக்கு தாமதமானதால் சசிதரனுக்கும் அவரது மனைவிக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த புவனாஸ்ரீ அறைக்குள் சென்று தொட்டில் கட்டும் கம்பியில் சேலையை மாட்டி தூக்கு போட்டுக் கொண்டார். இதை கவனித்த சசிதரன் உடனடியாக புவனாஸ்ரீ கீழே இறக்கி அம்மாபேட்டை கடலூர் மெயின் ரோட்டில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு புவனாஸ்ரீ உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்த தகவலின் பேரில் அம்மாபேட்டை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    Next Story
    ×