என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
விலை சரிவால் வைகாசி பட்டத்தில் சின்ன வெங்காய சாகுபடியை தவிர்த்த விவசாயிகள்
- வைகாசி பட்டத்தில் சின்ன வெங்காயத்துக்கு கிலோ ரூ.35 வரை விவசாயிகளுக்கு கிடைத்து வந்தது.
- கர்நாடக மாநிலத்தில் அதிகளவில் சின்ன வெங்காயம் சாகுபடி மேற்கொள்ளப்படுகிறது.
திருப்பூர் :
தமிழகத்தில் திருப்பூர் உள்ளிட்ட பல இடங்களில் சின்ன வெங்காய சாகுபடியில் விவசாயிகள் ஈடுபடுகின்றனர். கடந்த இரு ஆண்டாக ஊரடங்கால்பெரும்பாலான விவசாயிகள் வைகாசிப்பட்டத்தில்சின்ன வெங்காயம் சாகுபடியில் கவனம் செலுத்தினர். பலரும் பட்டறை அமைத்து, இருப்பு வைத்திருந்தனர். தேவைக்கும் அதிகமாக சின்ன வெங்காயம் சந்தைக்கு வந்ததால் விலை, கடும் வீழ்ச்சியடைந்தது. அதன் எதிரொலிதற்போது வரை நீடிக்கிறது.
வைகாசி பட்டத்தில் சின்ன வெங்காயத்துக்கு கிலோ ரூ.35 வரை விவசாயிகளுக்கு கிடைத்து வந்தது. வெளிச்சந்தையில் கிலோ 60 ரூபாய்க்கு மேல் விற்கப்பட்டது. ஆனால் தற்போது, 15 ரூபாய்க்கும் குறைவாகவே மொத்த வியாபாரிகளால் வாங்கப்படுகிறது. வெளிச்சந்தையில் கிலோ 25 முதல் 35 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. இதேபோல்விதை வெங்காய விலையும் கிலோ 20 முதல் 25 ரூபாய்க்கே விவசாயிகளிடம் இருந்து வாங்கப்படுகிறது.
இது குறித்து கட்சி சார்பற்ற விவசாயிகள் சங்க நிர்வாகி வேலுசாமி கூறுகையில், இம்முறை சின்ன வெங்காய சாகுபடி விவசாயிகளுக்கு பெரும் நஷ்டத்தை ஏற்படுத்தியிருக்கிறது. உர விலை கடுமையாக உயர்ந்துள்ளது. அதிக அளவு விவசாயிகள் நடப்பாண்டு வைகாசி பட்டத்தில் சின்ன வெங்காயம் சாகுபடியில் ஈடுபடவில்லை. ஏறத்தாழ 50 சதவீதம் அளவுக்கு சாகுபடி பரப்பு குறைந்துள்ளது என்றார்.
வேளாண் விற்பனை வணிகத்துறையினர் கூறுகையில், கர்நாடக மாநிலத்தில் அதிகளவில் சின்ன வெங்காயம் சாகுபடி மேற்கொள்ளப்படுகிறது. இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி தமிழகத்தில் சின்ன வெங்காயத்தை சந்தைப்படுத்த கர்நாடக வியாபாரிகள் தயாராகி வருகின்றனர். எனவேசின்ன வெங்காயத்தை மதிப்பு கூட்டுதல் மற்றும் ஏற்றுமதி வாய்ப்புக்கான வழிமுறைகளை விவசாயிகள் பின்பற்ற வேண்டும். அதற்கான பயிற்சி வழங்கப்படுகிறது என்றார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்