search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    களக்காடு அருகே விவசாயி தற்கொலை
    X

    களக்காடு அருகே விவசாயி தற்கொலை

    • முத்துகிருஷ்ணனுக்கு கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு விபத்தில் காலில் காயம் ஏற்பட்டது. கடந்த 2 நாட்களுக்கு முன் அதே இடத்தில் மீண்டும் காயம் ஏற்பட்டது.
    • களக்காடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    களக்காடு:

    களக்காடு அருகே உள்ள கடம்போடுவாழ்வு தெற்கு தெருவை சேர்ந்தவர் விவசாயி முத்துகிருஷ்ணன் (வயது 60). இவருக்கு கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு விபத்தில் காலில் காயம் ஏற்பட்டது. கடந்த 2 நாட்களுக்கு முன் அதே இடத்தில் மீண்டும் காயம் ஏற்பட்டது. இதனால் அவர் மனவேதனை அடைந்தார்.

    இதையடுத்து அவர் விஷம் குடித்து மயங்கினார். உறவினர்கள் அவரை மீட்டு நாங்குநேரி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு முதலுதவி சிகிச்சைக்கு பின் அவர் நெல்லை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலன் இன்றி நேற்று இறந்தார். இதுபற்றி புகாரின் பேரில் களக்காடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×