search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    அதிமுக பொதுக்குழு விவகாரம் - உச்சநீதிமன்றத்தில் ஈபிஎஸ் மேல்முறையீடு
    X

    எடப்பாடி பழனிசாமி

    அதிமுக பொதுக்குழு விவகாரம் - உச்சநீதிமன்றத்தில் ஈபிஎஸ் மேல்முறையீடு

    • அதிமுக பொதுக்குழுவில் 23 தீர்மானங்களை மட்டுமே நிறைவேற்ற வேண்டும் என 2 நீதிபதிகள் கொண்ட அமர்வு தீர்ப்பளித்தது.
    • அதிமுக பொதுக்குழு உறுப்பினர் சண்முகம் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டது.

    சென்னை:

    கட்சியின் செயற்குழு பொதுக்குழு முடிவுகளில் நீதிமன்றம் தலையிடமுடியாது என உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்துள்ள எடப்பாடி பழனிசாமி அணியினர் தெரிவித்துள்ளனர்.

    அதிமுக பொதுக்குழு தொடர்பான உயர்நீதிமன்ற உத்தரவுக்கு எதிர்ப்பு தெரிவித்து உச்ச நீதிமன்றத்தில் ஈ.பி.எஸ் அணியில் மேல் முறையீடு செய்துள்ளனர்.

    கட்சியின் செயற்குழு, பொதுக்குழு முடிவுகள் கட்சி நிர்வாகிகள் தொடர்புடையது. அதில் நீதிமன்றம் தலையிட அதிகாரம் கிடையாது.

    எனவே பொதுக்குழுவின் முடிவுகளை நீதிமன்றம் கட்டுப்படுத்தக் கூடாது என உயர் நீதிமன்றத்திற்கு உத்தரவிட வேண்டும் என அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

    Next Story
    ×