search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தஞ்சை கலைஞர் நகரில் விண்ணப்பித்தவர்களுக்கு மின் இணைப்பு வழங்க வேண்டும்
    X

    தஞ்சை கலைஞர் நகரில் விண்ணப்பித்தவர்களுக்கு மின் இணைப்பு வழங்க வேண்டும்

    • புதிய மின்சார இணைப்பு தொடர்பு கிடைக்காமல் பெரும்பாலான பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் கஷ்டப்படுகின்றனர்.
    • இரவில் விளக்கு வெளிச்சம் இல்லாமல் சிரமப்படுவதோடு போர்வெல் அமைத்தும் குடிநீருக்காக கஷ்டபடுகின்றனர் .

    தஞ்சாவூர்:

    தமிழ்நாடு மின்பகிர்மான கழகத்தின் சார்பில் பொதுமக்கள் குறைதீர்ப்பு கூட்டம் தஞ்சை கோர்ட் சாலையில் உள்ள மின் செயற்பொறியாளர் அலுவலகத்தில் நடைபெற்றது.

    இதில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியை சார்ந்த முத்துக்குமரன் அளித்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:-

    தஞ்சாவூர் தாலுகா நீலகிரி ஊராட்சியில் உள்ள கலைஞர் நகரில் சுமார் 500 -க்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகிறார்கள்.

    ஏராளமானோர் பல மாதங்களாக வீடுகள் மற்றும் கடைகளுக்கு புதிதாக மின்சார இணைப்பு வேண்டி விண்ணப்பித்து மனு அளித்து காத்திருக்கின்றனர்.

    புதிய மின்சார இணைப்பு தொடர்பு கிடைக்காமல் பெரும்பாலான பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் பயில்வதற்கு இரவில் விளக்கு வெளிச்சம் இல்லாமல் சிரமப்படுவதோடு போர்வெல் அமைத்தும் குடிநீருக்காக கஷ்டபடுகின்றனர் .

    எனவே உடனடியாக மின் இணைப்பு வழங்க துரித நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    Next Story
    ×