என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
வாழப்பாடி அருகே லாரி மோதி டிரைவர் பலி தொழிலாளி படுகாயம்
- கருமந்துறை பகுதியில் தங்கி லாரி டிரைவராக பணிபுரிந்து வந்தார்.
- கட்டுப்பாடு இழந்து நிலை தடுமாறி சாலையோர புளிய மரத்தில் வேகமாக மோதி விபத்துக்குள்ளானது.
வாழப்பாடி:
கள்ளக்குறிச்சி மாவட்டம் கச்சிராப் பாளையம் கல்வரா யன்மலை பொட்டியம் கிராமத்தை சேர்ந்தவர் பிரகாஷ் (வயது 24). இவர் கருமந்துறை பகுதியில் தங்கி லாரி டிரைவராக பணிபுரிந்து வந்தார். நேற்று காலை, அயோத்தியாப்பட்டணம் அடுத்த மின்னாம்பள்ளியில் இருந்து, டிப்பர் லாரியில் ஜல்லி பாரம் ஏற்றுக்
கொண்டு கல்வ ராயன்மலை கருமந்துறை நோக்கி ஓட்டிச் சென்றுள்ளார். இவருடன் அதே பகுதியைச் சேர்ந்த தொழிலாளி ஆண்டியப்பன் என்பவரும் லாரியில் அமர்ந்து சென்றுள்ளார்.
இந்தலாரி, வாழப்பாடி அடுத்த சந்திரப்பிள்ளை வலசு கிராமத்தில் பேளூர் - அயோத்தியாப்பட்டணம் சாலையில் சென்று கொண்டிருந்தபோது, கட்டுப்பாடு இழந்து நிலை தடுமாறி சாலையோர புளிய மரத்தில் வேகமாக மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் லாரி டிரைவர் பிரகாஷ், உடல் நசங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியானார்.
மேலும் ஆண்டியப்பன் படுகாயம் அடைந்த நிலையில் மீட்கப்பட்டு, மருத்துவமனையில் அனு மதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இந்த விபத்து குறித்து வாழப்பாடி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்