search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மாரண்டஅள்ளியில் தி.மு.க. ஆலோசனைக் கூட்டம்
    X

    மாரண்டஅள்ளியில் தி.மு.க. ஆலோசனைக் கூட்டம்

    • தி.மு.க. சார்பில் ஆலோசனைக் கூட்டம் நடைப்பெற்றது.
    • கிளை செயலாளர்கள் ,கவுன்சிலர்கள் கலந்து கொண்டனர்.

    பாலக்கோடு,

    மாரண்டஅள்ளி பட்டா ளம்மன் கோவில் வளாகத்தில் மாரண்டஅள்ளி தி.மு.க. சார்பில் கருணாநிதி நினைவு நாளில் மேற்கொள்ளப்படும் நிகழ்ச்சிகள் குறித்து ஆலோசனைக் கூட்டம் நடைப்பெற்றது.

    ஒன்றிய அவைத் தலைவர் தங்கசரவணன் தலைமை வகித்தார்.

    பேரூர் செயலாளர் வெங்கடேசன் முன்னிலை வகித்தார்.

    இதில் மாவட்ட பிரதிநிதி சுரேஷ், இளைஞர் அணி அமைப்பாளர் எதிந்தர், நகர துணை செயலாளர்கள் வசிஷ்டர், மாதையன், பொருளாளர் ஆறுமுகம், ஒன்றிய பிரதிநிதிகள் பாரதிதாசன், குமார், கிருஷ்ணகுமார், செல்வம், மார்கன்டன் மற்றும் கிளை செயலாளர்கள் ,கவுன்சி லர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

    இக்கூட்டத்தில் கருணாநிதி நினைவு தினத்தை முன்னிட்டு உறுப்பினர்களின் வீடுகளில் கருணாநிதி உருவ படத்தை வைத்து அஞ்சலி செலுத்துதல், மாரண்டஅள்ளியில் பிரதான கடை வீதி, மற்றும் முக்கிய வீதிகளின் வழியாக ஊர்வலமாக சென்று 4 முக்கிய இடங்களில் கருணாநிதி உருவ படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்துதல் மற்றும் வருங்காலங்களில் கட்சியில் புதிய உறுப்பி னர்களை சேர்த்தல் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    Next Story
    ×