search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தருமபுரி செட்டிக்கரை அருகே  நிலத்தகராறில் கணவன், மனைவியை தாக்கிய 4 பேர் கைது
    X

    தம்பதி தாக்கப்பட்ட சி.சி.டி.வி. காட்சி.

    தருமபுரி செட்டிக்கரை அருகே நிலத்தகராறில் கணவன், மனைவியை தாக்கிய 4 பேர் கைது

    • இருவரையும் மீட்டு தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை யில் சிகிச்சைக்காக அனு மதித்துள்ளனர்.
    • 4 பேரை தருமபுரி நகர காவல் துறையினர் கைது செய்தனர்.

    தருமபுரி,

    தருமபுரி அடுத்த செட்டிக்கரை பகுதியைச் சேர்ந்த முனியப்பன்-கோவிந்தம்மாள் தம்பதி யினருக்கு செந்தில்குமார், சண்முகம், சத்யா ஆகிய மூன்று பிள்ளைகள் உள்ளனர். இதில் மூன்று பிள்ளைகளுக்கும் திருமணமாகி தனித்தனியாக இருந்து வருகின்றனர்.

    முனியப்பனின் பூர்வீக சொத்தாக 85 சென்ட் நிலம் உள்ளது. இந்த 85 சென்ட்டில், மகள் சத்யாவிற்கு 35 சென்ட் பிரித்து கொடுக்கப்பட்டது. இந்நிலையில் மீதமுள்ள நிலத்தை பிரிப்பதில் செந்தில்குமார், சண்முகம், சத்யா ஆகியோருக்கு தகராறு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் கடந்த 20-ம் தேதி இரவு செந்தில்குமார் வீட்டின் முன்பு முனியப்பன், கோவிந்தம்மாள், சத்யா, கோபிநாத், ஆகியோர் தகராறு செய்துள்ளனர்.

    அப்பொழுது செந்தில்கு மாரின் மனைவி கவிதாவை தகாத வார்த்தைகளால் திட்டி தாக்கியுள்ளனர். இதனை அறிந்த செந்தில்குமார் வீட்டில் இருந்து வெளியே வந்து பார்த்து கேட்டுள்ளார். அப்பொழுது செந்தில்குமார் மற்றும் அவரது மனைவி கவிதா இருவரையும் கடுமையாக தாக்கியுள்ளனர். இதனை அறிந்த அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள், இருவரையும் மீட்டு தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை யில் சிகிச்சைக்காக அனு மதித்துள்ளனர்.

    இதில் தாக்குத லுக்குள்ளான செந்தில் குமார் மற்றும் அவரது மனைவி இருவரும் படுக்காயத்துடன் தருமபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த சம்பவம் குறித்து தருமபுரி நகர காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். அப்பொழுது செந்தில்குமார் மற்றும் அவரது மனைவி கவிதாவை கடுமையாக தாக்கும் வீடியோ அருகில் இருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவாகி இருந்தது.

    இந்த கண்காணிப்பு கேமரா காட்சிகளை வைத்து முனியப்பன், கோவிந்தம்மாள், சத்யா மற்றும் சத்யாவின் மகன் கோபிநாத் ஆகிய 4 பேரையும் தருமபுரி நகர காவல் துறையினர் கைது செய்தனர்.

    Next Story
    ×