search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தருமபுரி நகராட்சி அதிகாரி-உதவியாளர் சஸ்பெண்டு
    X

    தருமபுரி நகராட்சி அதிகாரி-உதவியாளர் சஸ்பெண்டு

    • நிலுவை தொகையை வசூலிக்க கடந்த மாதங்களாக தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
    • 2 பேரையும் சஸ்பெண்டு செய்து ஆணையர் சித்ரா சுகுமார் உத்தரவிட்டார்.

    தருமபுரி,

    தருமபுரி நகரில் நகராட்சி எல்லைக்குட்பட்ட பகுதியில் செயல்படும் வணிக நிறுவனங்கள், தனியார் அலுவலகங்கள் மற்றும் கடைகள் செலுத்த வேண்டிய சொத்து வரி, குடிநீர் வரி ஆகியவற்றில் உள்ள நிலுவை தொகையை வசூலிக்க கடந்த மாதங்களாக தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

    அதிக வரி நிலுவையில் உள்ள சில தனியார் நிறுவன அலுவலகங்களுக்கு பூட்டு போடப்பட்டது. வரி நிலுவை தொகையை உடனடியாக செலுத்த சம்பந்தப்பட்டவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.

    இந்தநிலையில் நேற்று நகராட்சி ஆணையர் சித்ரா சுகுமார் தலைமையில் அதிகாரிகள் குழுவினர் நகராட்சிக்கு செலுத்த வேண்டிய வரி நிலுவையில் உள்ள தனியார் நிறுவனங்கள், தனியார் அலுவலகங்களில் திடீர் ஆய்வு நடத்தினர்.

    அப்போது அதிக வரி நிலுவையில் உள்ள பூட்டப்பட்ட ஒரு தனியார் அலுவலகம் அதிகாரிகளின் முறையான அனுமதி இன்றி மீண்டும் திறக்கப்பட்டது தெரிய வந்தது.இது குறித்து நகராட்சி ஆணையர் சித்ரா சுகுமார் வரி நிலுவை தொகை செலுத்தப்படாததால் பூட்டப்பட்ட தனியார் அலுவலகம் அதிகாரிகளின் அனுமதி இன்றி மீண்டும் திறக்கப்பட்டது தொடர்பாக நகராட்சி வருவாய் ஆய்வாளர் முத்துக்குமார், உதவியாளர் சரவணன் ஆகிய 2 பேரிடம் விசாரணை நடத்தினார்.

    இதையடுத்து அவர்கள் 2 பேரையும் சஸ்பெண்டு செய்து ஆணையர் சித்ரா சுகுமார் உத்தரவிட்டார்.

    Next Story
    ×