search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கோவில் இடித்து அகற்றம்
    X

    கோவில் இடித்து அகற்றப்பட்டது.

    கோவில் இடித்து அகற்றம்

    • இந்த கோவில் ஆக்கிரமிப்பு இடத்தில் கட்டப்பட்டதாக கூறி மாநகராட்சி அதிகாரிகள் இடித்து அகற்றினர்.
    • இதேபோல் கோவில் அருகே இருந்த கடைகளையும் இடித்தனர்.

    தஞ்சாவூர்:

    தஞ்சை மாநகராட்சியில் ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட கடைகள், வணிக வளாகங்கள் இடித்து அகற்றப்பட்டு வருகிறது.

    அந்த வகையில் தஞ்சை எம்.கே. மூப்பனார் சாலை மற்றும் வி .எம். பெருமாள் கோவில் தெரு ஆகியவற்றை இணைக்கும் ஒரு தனியார் பள்ளி அருகே விநாயகர் கோவில் உள்ளது.

    இந்த கோவில் ஆக்கிரமிப்பு இடத்தில் கட்டப்பட்டதாக கூறி மாநகராட்சி அதிகாரிகள் இடித்து அகற்றினர். இதேபோல் கோவில் அருகே இருந்த கடைகளையும் இடித்தனர்.

    Next Story
    ×