என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
களக்காடு அருகே பஞ்சாயத்து தலைவிக்கு கொலை மிரட்டல் - உறவினர்கள் மீது வழக்கு
- பஞ்சாயத்து தலைவியின் கணவர் உடல்நல குறைவால் கடந்த 8 மாதங்களுக்கு முன்பு இறந்தார்.
- முகநூலில் அய்யம்மாள் குறித்து அவதூறாக கருத்துக்களை பதிவிட்டுள்ளதை தட்டிக் கேட்ட போது மிரட்டி உள்ளனர்.
களக்காடு:
களக்காடு அருகே உள்ள சேதுராயபுரம் காலனியை சேர்ந்தவர் முருகன் மனைவி அய்யம்மாள் ( வயது 50). இவர் சீவலப்பேரி பஞ்சாயத்து தலைவராக உள்ளார். இவரது கணவர் உடல்நல குறைவால் கடந்த 8 மாதங்களுக்கு முன்பு இறந்தார்.
இந்நிலையில் முருகனின் தம்பி சிதம்பரபுரம் ராஜபுதூரை சேர்ந்த நம்பிராஜன் (42), அவரது உறவினர் தங்கராஜ் மகன் மதன்குமார் (32) ஆகிய இருவரும் அய்யம்மாளை அவதூறாக பேசி வந்துள்ளனர்.
கடந்த சில நாட்களுக்கு முன் சேதுராயபுரம் முப்பிடாதி அம்மன் கோவில் கொடை விழா நடந்தது. இதில் விழாகுழுவினர் பஞ்சாயத்து தலைவி அய்யம்மாளுக்கு பொன்னாடை அணிவித்து கவுரவப்படுத்தினர்.
அப்போது நம்பிராஜன் மைக்கில் அய்யம்மாள் பற்றி அவதூறாக பேசியுள்ளார். மதன்குமார் முகநூலில் அய்யம்மாள் குறித்து அவதூறாக கருத்துக்களை பதிவிட்டுள்ளார். இதையடுத்து அய்யம்மாள் இருவரையும் தட்டிக் கேட்டார்.
இதனால் ஆத்திரம் அடைந்த நம்பிராஜன், மதன்குமார் இருவரும் அய்யம்மாளை அவதூறாக பேசியதுடன், கொலை மிரட்டலும் விடுத்தனர்.
இதுபற்றி அவர் களக்காடு போலீசில் புகார் செய்தார். சப்-இன்ஸ்பெக்டர் ராமநாதன் இதுதொடர்பாக நம்பிராஜன், மதன்குமார் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்