search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சேலம் அருகே மனைவியின் கள்ளக்காதலனை வெட்டிய  தறிதொழிலாளி ெஜயிலில் அடைப்பு
    X

    சேலம் அருகே மனைவியின் கள்ளக்காதலனை வெட்டிய தறிதொழிலாளி ெஜயிலில் அடைப்பு

    • தனது மனைவி மல்லிகா தன்னை விட்டு பிரிந்து செல்ல முருகேசன்தான் காரணம் என எண்ணிய மாணிக்கம், முருகேசனை கண்டித்தார்.
    • இருப்பினும் முருகேசன் தொடர்ந்து மல்லிகாவுடன் பழக்கத்தில் இருந்து வந்துள்ளார்.

    சேலம்:

    சேலம் மாவட்டம் வீரபாண்டி அருகே உள்ள பூலாவரி அக்ரஹாரம் சின்ன ஏரிக்காடு பகுதியை சேர்ந்தவர் மாணிக்கம் (வயது 48). தறித்தொழிலாளி. இவருடைய மனைவி மல்லிகா (45).

    கள்ளக்காதல்

    இந்தநிலையில் மல்லிகா, கணவரை பிரிந்து ராஜபாளையம் அரிமா நகர் பகுதியில் தனியாக வசித்து வருகிறார். ஆட்டையாம்பட்டி அருகே உள்ள எஸ்.பாப்பாரப்பட்டி சோலைகவுண்டர்காடு பகுதியை சேர்ந்த எலக்ட்ரீசியன் வேலை செய்து வரும் முருகேசன் (45) என்பவருக்கும் மல்லிகாவுக்கு இடையே கள்ளக்காதல் இருந்ததாக கூறப்படுகிறது.

    இதனிடையே தனது மனைவி மல்லிகா தன்னை விட்டு பிரிந்து செல்ல முருகேசன்தான் காரணம் என எண்ணிய மாணிக்கம், முருகேசனை கண்டித்தார். இருப்பினும் முருகேசன் தொடர்ந்து மல்லிகாவுடன் பழக்கத்தில் இருந்து வந்துள்ளார்.

    இந்த நிலையில் சம்பவத்தன்று முருகேசன் நைனாம்பட்டியில் உள்ள தனியார் பள்ளி அருகே மோட்டார்சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது எதிரே வந்த மாணிக்கம், முருகேசனை வழிமறித்து அவரிடம் தகராறில் ஈடுபட்டார். பின்னர் ஆத்திரம் அடைந்த மாணிக்கம் அரிவாளால் முருகேசனின் தலையில் வெட்டினார். இதை பார்த்த பொதுமக்கள் சண்டையை விலக்கிவிட்டு, முருகேசனை மீட்டு சிகிச்சைக்காக சேலத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர்.

    ெஜயிலில் அடைப்பு

    இதுகுறித்த புகாரின் பேரில் ஆட்டையாம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து மாணிக்கத்தை கைது செய்தனர். பின்னர் போலீசார், அவரை சேலம் ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, சேலம் மத்திய ஜெயிலில் அடைத்தனர்.

    Next Story
    ×