search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    10, 12-ம் வகுப்பில் அதிக மதிப்பெண் பெற்ற அரசு பள்ளி மாணவர்களுக்கு பாராட்டு-பரிசு
    X

    10, 12-ம் வகுப்பில் அதிக மதிப்பெண் பெற்ற அரசு பள்ளி மாணவர்களுக்கு பாராட்டு-பரிசு

    • 10-ம் வகுப்பு, 12-ம் வகுப்பில் முதலிடம், பிடித்த மாணவர்களுக்கு பாராட்டு மற்றும் ஊக்கத்தொகை வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.
    • செங்கோட்டை 14-வது வார்டு நகர்மன்ற உறுப்பினா் பொன்னுலிங்கம் சொந்த நிதியிலிருந்து ஊக்கத்தொகையினை வழங்கினார்.

    செங்கோட்டை:

    செங்கோட்டை எஸ்.எம்.எஸ்.எஸ். அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் செங்கோட்டை வட்டாரத்தில் அரசு பள்ளிகளில் பயின்ற 10-ம் வகுப்பு, 12-ம் வகுப்பில் முதலிடம், பிடித்த மாணவர்களுக்கு பாராட்டு மற்றும் ஊக்கத்தொகை வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. இந்து அறநிலையத்துறை இணைஆணையா் அன்பு மணி, மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக ஜெனட் உறுப்பினா் பொறியாளா் முரளி ஆகியோர் தலைமை தாங்கினர். செங்கோட்டை நகர்மன்ற தலைவா் ராம லெட்சுமி, துணைத்தலைவா் நவநீதகிருஷ்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனா். பள்ளி தலைமை ஆசிரியா் முருகேசன் வரவேற்று பேசினார்.

    அதனைத்தொடா்ந்து எஸ்.ஆர்.எம். பெண்கள் மேல்நிலைப்பள்ளி 12-ம் வகுப்பு மாணவி அனுசுயா 568 மதிப்பெண்கள், 10-ம் வகுப்பு மாணவி சவுமியா 475 மதிப்பெண்கள், எஸ்.எம்.எஸ்.எஸ். அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் பயின்று 12-ம் வகுப்பில் 529 மதிப்பெண்கள் பெற்ற மாரிச்செல்வம், 10-ம் வகுப்பில் 473 மதிப்பெண்கள் பெற்ற ஹரிஹசுதன், மேலூர் அரசு உயர்நிலைப்பள்ளி 10-ம் வகுப்பு மாணவன் பிரகாஷ் 440 மதி்ப்பெண்கள் ஆகியோருக்கு செங்கோட்டை 14-வது வார்டு நகர்மன்ற உறுப்பினா் பொன்னுலிங்கம் சொந்த நிதியிலிருந்து ஊக்கத்தொகையினை வழங்கினார்.

    இதனைத்தொடர்ந்து இந்து அறநிலையத்துறை இணை ஆணையா் அன்புமணி வாழ்த்தி பேசினார். நிகழ்ச்சியில் உதவி தலைமை ஆசிரியா் சமுத்திரக்கனி, என்.எஸ்.எஸ். ஆசிரியா் முருகன், ஆசிரியா்கள் சிவசுப்பிரமணியன், சுடர்மணி, நடிகர் ஜமீன்முத்துக்குமார், சமூக ஆர்வலா்கள் வீரலெட்சுமி, லெட்சுமணன், மாணவ, மாணவிகளின் பெற்றோர் உள்பட பலா் கலந்து கொண்டனா். முடிவில் பள்ளி ஆசிரியா் சுதாகா் நன்றி கூறினார்.

    Next Story
    ×