பரமத்தி வேலூர் அருகே கல்லூரி மாணவி திடீர் மரணம்

பரமத்தி வேலூர் அருகே வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்த கல்லூரி மாணவியை ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். செல்லும் வழியிலேயே பரிதாபமாக இறந்தார்.
பரமத்தி வேலூர் அருகே கல்லூரி மாணவி திடீர் மரணம்
Published on

பரமத்திவேலூர்:

நாமக்கல் மாவட்டம், பரமத்தி வேலூர் அருகே உள்ள காளிப்பட்டி பகுதியை சேர்ந்தவர் கோவிந்தசாமி. இவரது மகள் மேனகா (வயது 20). இவர் ஒரு தனியார் கல்லூரியில் 3-ம் ஆண்டு பட்டப்படிப்பு படித்து வந்தார். இவருக்கு நேற்று திடீரென வயிற்று வலி ஏற்பட்டது. உடனே அவரை பரமத்தி வேலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சிகிச்சை அளிக்கப்பட்டது.

பின்னர் மேல் சிகிச்சைக்காக கரூரில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு மேனகாவை டாக்டர்கள் பரிசோதித்து பார்த்தபோது ஏற்கனவே இறந்துவிட்டதாக கூறினர்.

உறவினர்கள் அவரது உடலை பார்த்து கதறி அழுதனர். புகாரின் பேரில் பரமத்தி வேலூர் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com