search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    குமாரபாளையம் அருகே மின்சாரம் தாக்கி கல்லூரி மாணவர் பலி
    X

    பிரகாஷ்.

    குமாரபாளையம் அருகே மின்சாரம் தாக்கி கல்லூரி மாணவர் பலி

    குமாரபாளையம் அருகே மின்சாரம் தாக்கி கல்லூரி மாணவர் பலியானார்.

    குமாரபாளையம்:

    குமாரபாளையம் தட்டான்குட்டை ஊராட்சி, உப்புக்குளம் பகுதியில் வசித்து வந்தவர் பிரகாஷ்(வயது 22). இவர் தனியார் கல்லூரியில் பி.ஈ., இறுதியாண்டு படித்து வந்தார்.

    இவரது உறவினர் வீட்டு கிரஹபிரவேச நிகழ்ச்சிக்காக வீட்டில் வயரிங் வேலை செய்து கொண்டிருந்தார். அப்போது எதிர்பாரதவிதமாக அவரை மின்சாரம் தாக்கியது. இதில் மயங்கி விழுந்த அவரை குமாரபாளையம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். வழியிலேயே பிரகாஷ் பரிதாபமாக இறந்தார்.

    இது குறித்து குமாரபாளையம் இன்ஸ்பெக்டர் ரவி, எஸ்.எஸ்.ஐ. தன்ராஜ் வழக்குபப்திவு செய்து விசாரணை செய்து வருகிறார்கள்.

    Next Story
    ×