என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் கலெக்டர் ஆய்வு
- குழந்தைகள் அங்கன்வாடி மையத்தினை பார்வையிட்டு குழந்தைகளுக்கு வழங்கப்படும் உணவின் தரம் குறித்தும் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
- விவசாயிகளுக்கு வழங்கப்படும் உரம் பற்றிய விபரம், இருப்பு விபரம், விவசாய கடன் பற்றிய விபரம் ஆகியவை குறித்து நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
தஞ்சாவூர்:
தஞ்சாவூர் மாவட்டம், திருவோணம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட பகுதிகளில் நடைபெற்று வரும் பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகளை மாவட்ட கலெக்டர் தினேஷ்பொ ன்ராஜ் ஆலிவர் பார்வை யிட்டு ஆய்வு செய்தார்.
அப்போது அவர் கூறியதாவது:-
திருவோணம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி, அதம்பை (வடக்கு) ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி, மற்றும் அதம்பை வடக்கு அரசு உயர்நிலைப்பள்ளி ஆகிய பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவிகளுக்கு வழங்கப்படும் சத்துணவின் தரம் குறித்தும், பள்ளியின் வகுப்பறை, சுற்றுச்சுவர், கழிவறை ஆகியவற்றின் தரம் மற்றும் சுகாதாரம் குறித்தும் ஆய்வு செய்யப்பட்டது.
மேலும் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சிப் திட்டப்பணிகள் மூலம் செயல்பட்டு வரும் திருவோணம், அதம்பை வடக்கு குழந்தைகள் அங்கன்வாடி மையத்தினை பார்வையிட்டு குழந்தை களுக்கு வழங்கப்படும் உணவின் தரம் குறித்தும் ஆய்வு மேற்கொ ள்ளப்ப ட்டது.
பின்னர் அதம்பை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் பொதுமக்களுக்கு வழங்க ப்படும் சிகிச்சை முறை, அடிப்படை வசதிகள் குறித்தும் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்யப்பட்டது. அதம்பை தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் விவசாயிகளுக்கு வழங்கப்படும் உரம் பற்றிய விபரம், இருப்பு விபரம், விவசாய கடன் பற்றிய விபரம் ஆகியவை குறித்து நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்து விவசாயிகளுக்கு தேவையான வேளாண் இடுப்பொருட்களை காலதா மதமின்றி உடனடியாக வழங்க வேண்டும்என சம்பந்தப்பட்ட அலுவ லர்களுக்கு அறிவுறு த்தப்பட்டுள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.
இநத ஆய்வின் போது திருவோணம் ஒன்றி யக்குழுத் தலைவர் செல்லம் சௌந்தர்ராஜன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் பொய்யாமொழி, வீரமணி, பட்டுக்கோட்டை தாசில்தார் ராமச்சந்திரன் மற்றும் அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்