search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மதுக்கூர் பேரூராட்சியில் நீர் நிலைகளில் தூய்மை பணி
    X

    தூய்மை பணி

    மதுக்கூர் பேரூராட்சியில் நீர் நிலைகளில் தூய்மை பணி

    • குளங்களில் கரையோர பகுதிகளில் மரக்கன்றுகள் நடுதல், பள்ளிவாசல் தெரு, வார்டு 6, மரைக்காயர் தெரு வார்டு 13-ல் மரங்கள் நடுதல் என 45-க்கு மேற்பட்ட மரக்கன்றுகள் நடப்பட்டன.
    • மணியன் குளம் அருகில் “என் குப்பை என் பொறுப்பு” என்ற பிளக்ஸ் வைக்கப்பட்டது.

    மதுக்கூர்:

    தஞ்சை மாவட்ட கலெ க்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் உத்தரவு படியும், மதுக்கூர் பேரூராட்சி செயல் அலுவலர் ராமபிரசாத் வழிகாட்டுதல் படியும், மதுக்கூர் பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் நகரங்களின் தூய்மைக்கான மக்கள் இயக்கம் சார்பில் பாப்பாத்திகுளம், ஆதி திராவிடர்குளம், மணியன் குளம் உள்ளிட்ட நீர்நிலைகள் சுத்தம் செய்யப்பட்டன. பிளாஸ்டிக் கழிவுகள் திடக்கழிவுகள் நீக்கி சுத்தம் செய்யப்பட்டன.

    அம்மா குளம், ஆதிதிராவிட குளத்தில் கருவேல மரங்கள், ஆகாய தாமரைகள்அகற்ற ப்பட்டன. மேலும் படப்பை காடு வார்டு 1, மேல சூரியதோட்டம் வார்டு 2 ஆகியவற்றில் வடிகால் சுத்தம் செய்யப்பட்டது.

    இதேபோல் மணிய ன்குளம், ஆதி திராவிடர் குளம் உள்ளிட்ட குளங்களில் கரையோர பகுதிகளில் மரக்கன்றுகள் நடுதல், பள்ளிவாசல் தெரு, வார்டு 6, மரைக்காயர் தெரு வார்டு 13-ல் மரங்கள் நடுதல் என 45-க்கு மேற்பட்ட மரக்கன்றுகள் நடப்பட்டன.இதேபோல் மணியன் குளம் அருகில் "என் குப்பை என் பொறுப்பு" என்ற பிளக்ஸ் வைக்கப்பட்டது. மேலும் நீர் நிலைகள் அருகில் உள்ள குப்பைகள் எல்லாம் அகற்றம் செய்யப்பட்டது.இதில் பேரூராட்சி மன்ற தலைவர் வகிதா பேகம் ஹாஜா, மாணவர்கள், தன்னார்வலர்கள், குடியி ருப்பு நல சங்கம், தூய்மை பணியாளர்கள், பேரூராட்சி மன்ற உறுப்பினர்கள் என பலர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×