search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தூய்மை இந்தியா விழிப்புணர்வு பேரணி
    X

    பேரணியை போலீஸ் டி.எஸ்.பி. செந்தில்குமார் கொடியசைத்து தொடங்கி வைத்த காட்சி.

    தூய்மை இந்தியா விழிப்புணர்வு பேரணி

    • ராசிபுரத்தில் தூய்மை இந்தியா விழிப்புணர்வு பேரணி போலீஸ் டி.எஸ்.பி. தொடங்கி வைத்தார்.
    • இதில் கல்லூரி மாணவ மாணவிகளுக்கு ராசிபுரம் காவல்துறை சார்பில் காவல் உதவி என்ற செயலியை அறிமுகப்படுத்தப்பட்டது.

    ராசிபுரம்:

    ராசிபுரத்தில் பெட்ரோலியம் நிறுவனத்தின் சார்பில் தூய்மை இந்தியா விழிப்புணர்வு பேரணி நடந்தது. பேரணியை ராசிபுரம் டி.எஸ்.பி. செந்தில்குமார் கொடியசைத்து தொடங்கி வைத்தார். இதில் முத்தாயம்மாள் கலை அறிவியல் கல்லூரி மாணவ மாணவிகள் கலந்துகொண்டு சுற்றுச்சூழல் பாதுகாப்பு, சுகாதாரம், எரிபொருள் சிக்கனம் போன்ற வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தி சென்றனர்.

    பேரணி பழைய பஸ் நிலையப் பகுதியிலிருந்து புறப்பட்டு நகரின் முக்கிய வீதிகள் வழியாக சென்று முடிவடைந்தது. இதைத் தொடர்ந்து தனியார் திருமண மண்டபத்தில் தூய்மை இந்தியா என்ற தலைப்பில் கட்டுரை போட்டிகள், பேச்சு போட்டிகள் நடத்தப்பட்டு அதில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள், சான்றிதழ்கள் பெட்ரோலியம் நிறுவனத்தின் சார்பில் வழங்கப்பட்டன.

    நிகழ்ச்சியில் பெட்ரோல் நிறுவனத்தின் தலைவர் குண்ணாஜி ராவ், சேல்ஸ் ஆபிஸர் வெங்கடேஸ்வர ராவ், ராசிபுரம் சேதுராம், இந்தியன் வங்கி மேனேஜர் அசோகன், தொழிலதிபர் சுப்பிரமணியம், பெட்ரோலிய நிறுவனத்தின் டீலர்கள், மாணவ மாணவிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர். இதில் கல்லூரி மாணவ மாணவிகளுக்கு ராசிபுரம் காவல்துறை சார்பில் காவல் உதவி என்ற செயலியை அறிமுகப்படுத்தப்பட்டது.

    Next Story
    ×