என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
செங்கல்பட்டு மாவட்டத்தில் தே.மு.தி.க. கவுன்சிலர் பா.ஜனதாவில் இணைந்தார்
- செங்கல்பட்டு மாவட்டத்தில் மாவட்ட தலைவர் செம்பாக்கம் வேத சுப்பிரமணியன் கிராமம் கிராமமாக சுற்றுப்பயணம் செய்து வருகிறார்.
- தே.மு.தி.க. கவுன்சிலர் பா.ஜனதாவில் இணைய விருப்பம் தெரிவித்தார்.
சென்னை:
தமிழகத்தில் பா.ஜனதாவை வலுப்படுத்தும் வகையில் மாவட்டந்தோறும் உறுப்பினர் சேர்க்கையை தீவிரப்படுத்தவும், மாற்று கட்சிகளில் அதிருப்தியுடன் இருப்பவர்கள் பா.ஜனதாவில் சேர்ந்து பணியாற்ற விரும்பினால் அவர்களை வரவேற்று கட்சியில் இணைக்கும்படியும், அனைவரையும் அரவணைத்தால் தான் தமிழகத்தில் நமது ஆட்சி என்ற லட்சியத்தை எட்ட முடியும் என்று வேலூர் செயற்குழு கூட்டத்தில் மாவட்ட தலைவர்களுக்கு மாநில தலைவர் அண்ணாமலை அறிவுறுத்தினார்.
அதன்படி செங்கல்பட்டு மாவட்டத்தில் மாவட்ட தலைவர் செம்பாக்கம் வேத சுப்பிரமணியன் கிராமம் கிராமமாக சுற்றுப்பயணம் செய்து வருகிறார். இந்த சுற்றுப்பயணத்தின்போது இடைக்காழி நாடு பேரூராட்சி 6-வது வார்டு தே.மு.தி.க. கவுன்சிலர் வீரராகவன் என்ற இம்மானுவேல் செம்பாக்கம் வேத சுப்பிரமணியனை நேரில் சந்தித்து பா.ஜனதாவில் இணைய விருப்பம் தெரிவித்தார்.
அவரை வரவேற்று கட்சியில் இணைத்து சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தார். இந்த நிகழ்ச்சியில் மாவட்ட துணைத்தலைவர் முன்னாள் எம்.எல்.ஏ. வாசுதேவன், அமைப்பு சாரா பிரிவின் மாவட்ட தலைவர் செய்யூர் மதன், இளைஞர் அணி பொது செயலாளர் விஜயகுமார், இடைக்காழி நாடு பேரூர் பா.ஜனதா தலைவர் சுதாகர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்