search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தனி நீதிபதி உத்தரவு ரத்து அறிவிப்பு: நெல்லையில் அ.தி.மு.க.வினர் இனிப்பு வழங்கி கொண்டாட்டம் -தச்சை கணேசராஜா தலைமையில் எம்.ஜி.ஆர். சிலைக்கு மாலை அணிவிப்பு
    X

    மாவட்ட செயலாளர் தச்சை கணேசராஜா தலைமையில் எம்.ஜி.ஆர். சிலைக்கு அ.தி.மு.க.வினர் மாலை அணிவித்த காட்சி.

    தனி நீதிபதி உத்தரவு ரத்து அறிவிப்பு: நெல்லையில் அ.தி.மு.க.வினர் இனிப்பு வழங்கி கொண்டாட்டம் -தச்சை கணேசராஜா தலைமையில் எம்.ஜி.ஆர். சிலைக்கு மாலை அணிவிப்பு

    • அ.தி.மு.க. பொதுக்குழு தொடர்பாக ஓ.பன்னீர்செல்வம் தொடர்ந்த வழக்கில் பொதுக்குழு செல்லாது என தனி நீதிபதி உத்தரவிட்டார்.
    • நெல்லை மாவட்ட செயலாளர் தச்சை கணேசராஜா தலைமையில் இன்று அ.தி.மு.க.வினர் கொக்கிரகுளத்தில் உள்ள எம்.ஜி.ஆர். சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

    நெல்லை:

    அ.தி.மு.க. பொதுக்குழு தொடர்பாக ஓ.பன்னீர்செல்வம் தொடர்ந்த வழக்கில் பொதுக்குழு செல்லாது என தனி நீதிபதி உத்தரவிட்டார்.

    ஐகோர்ட்டு உத்தரவு

    இதனை எதிர்த்து எடப்பாடி பழனிசாமி தரப்பினர் ஐகோர்ட்டில் மேல்முறையீடு செய்தனர். இந்த வழக்கில் இன்று தீர்ப்பு வெளியானது. அதில் தனி நீதிபதி உத்தரவு ரத்து செய்து அறிவிக்கப்பட்டது.

    இதைத்தொடர்ந்து பல்வேறு பகுதியில் அ.தி.மு.க.வினர் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். நெல்லை மாவட்ட செயலாளர் தச்சை கணேசராஜா தலைமையில் இன்று அ.தி.மு.க.வினர் கொக்கிரகுளத்தில் உள்ள எம்.ஜி.ஆர். சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

    பின்னர் பட்டாசு வெடித்து கொண்டாட்டத்தில் ஈடுபட்ட அவர்கள் அப்பகுதியில் சென்ற பொதுமக்கள் மற்றும் பஸ்களில் சென்ற பயணிகளுக்கு இனிப்பு வழங்கினார்கள்.

    நிகழ்ச்சியில் மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற செயலாளர் பெரியபெருமாள், பகுதி செயலாளர்கள் சிந்துமுருகன், மேகை சக்திகுமார், ஜெனி, திருத்து சின்னதுரை, சண்முககுமார், டவுன் கூட்டுறவு வங்கித்தலைவர் பால்கண்ணன், பாளை தெற்கு ஒன்றிய செயலாளர் முத்துக்குட்டி பாண்டியன்,

    முன்னாள் அரசு வக்கீல் அன்புஅங்கப்பன், ஜெயலலிதா பேரை செயலாளர் சீனிமுகமதுசேட், பூக்கடை சப்பாணிமுத்து, ஒன்றிய செயலாளர் லெட்சுமண பெருமாள், பாறையடி மணி உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×