search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கோவையில் வாலிபரிடம் பிக்பாக்கெட்- நண்பர்கள் கைது
    X

    கோவையில் வாலிபரிடம் பிக்பாக்கெட்- நண்பர்கள் கைது

    • ஒர்க்சாப்பில் 200 கிலோ காப்பர் திருடியவரை தேடி வருகிறார்கள்
    • 2 பேர் அன்பின் அருகில் சென்று அவரது பாக்கெட்டில் இருந்த பணத்தை பிக்பாக்கெட் அடித்தனர்.

    கோவை,

    புதுகோட்டையை சேர்ந்தவர் அன்பு (வயது 26). இவர் கோவை துடியலூரை அடுத்த தொப்பம்பட்டியில் தங்கி கூலி வேலை செய்து வருகிறார்.

    சம்பவத்தன்று இவர் தனது நண்பருடன் கவுண்டம்பாளையம் பகுதியில் நின்று இருந்தார். அப்போது அங்கு 2 பேர் வந்தனர். அவர்கள் அன்பின் அருகில் சென்று அவரது பாக்கெட்டில் இருந்த பணத்தை பிக்பாக்கெட் அடித்தனர்.

    இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த அவர் சத்தம் போட்டார்.அவரின் சத்தத்தை கேட்டு அவரது நண்பர் அங்கு ஓடி வந்தார். அவர்கள் அந்த 2 பேரையும் மடக்கி பிடித்தனர். பின்னர் அவர்களை துடியலூர் போலீசில் ஒப்படைத்தனர்.

    போலீஸ் விசாரணையில் அவர்கள் கோவை ராக்கிப்பாளையம் நேரு நகரை சேர்ந்த நண்பர்கள் வேலுமணி (50) மற்றும் நாகப்பன் (50) என்பது தெரியவந்தது. இதையடுத்து அன்பு அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து 2 பேரையும் கைது செய்தனர்.அவர்களை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

    கோவை பெரியநாயக்கன் பாளையம் இடிகரை மணியகாரம்ப ாளையத்தை சேர்ந்தவர் பால்பாண்டி. இவரது மனைவி யாழினி (31). இவர் இடிகரையில் சொந்தமாக ஒர்க்சாப் வைத்து நடத்தி வருகிறார்.

    சம்பவத்தன்று இவர் வழக்கம்போல வேலைகளை முடித்து விட்டு ஒர்க்சாப்பை பூட்டிவிட்டு வீட்டுக்கு சென்றார். அப்போது அங்கு வந்த மர்ம நபர்கள் ஒர்க்சாப்பின் மதில் சுவரை ஏறி குதித்து அங்கிருந்த ரூ.50 ஆயிரம் மதிப்பிலான 200 கிலோ காப்பரை திருடி சென்றனர்.

    மறுநாள் காலை யாழினி ஒர்க்சாப்பை திறந்து பார்த்தபோது அங்கு திருட்டு போயிருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். பின்னர் இதுகுறித்து அவர் பெரியநாயக்கன் பாளையம் போலீசில் புகார் தெரிவித்தார்.

    போலீசார் வழக்குப்பதிவு செய்து அந்த பகுதியில் உள்ள சி.சி.டி.வி காட்சிகளை ஆய்வு செய்து 200 கிலோ காப்பரை கொள்ளையடித்த திருடர்களை தேடி வருகின்றனர்.

    Next Story
    ×