search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பூஸ்டர் டோஸ் தடுப்பூசி முகாம்
    X

    மதுக்கூர் பேரூராட்சி அலுவலகத்தில் பூஸ்டர் டோஸ் தடுப்பூசி முகாம் நடைபெற்றது.

    பூஸ்டர் டோஸ் தடுப்பூசி முகாம்

    • ஒலிபெருக்கி மூலம் பொதுமக்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
    • முகாமில் வட்டார சுகாதார மேற்பார்வையாளர், சமுதாய சுகாதார செவிலியர்கள், பகுதி சுகாதார செவிலியர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    மதுக்கூர்:

    மதுக்கூர் பேரூராட்சியில் இன்று கொரோனா தவணை தடுப்பூசி சிறப்பு முகாம் நடைபெற்றது. இதனையடுத்து ஒலிபெருக்கி மூலம் பொதுமக்களுக்கு சுகாதார மேற்பார்வையாளர் ரவி மூலம் தகவல் தெரிவிக்கப்பட்டு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.இந்த சிறப்பு ஊக்கு ஊக்குவிப்பு முகாமை பேரூராட்சி தலைவர் வகிதா பேகம் ஹாஜா தலைமையில் செயல் அலுவலர் ராம்பிரசாத் மற்றும் மருத்துவ அலுவலர் ராஜ்குமார் முன்னிலையில் தொடங்கி வைக்கப்பட்டு நடைபெற்றது.

    இந்த முகாமில் வட்டார சுகாதார மேற்பார்வையாளர் சீனிவாசன், சுகாதார ஆய்வாளர்கள் ரவி ,நெடுஞ்செழியன் சமுதாய சுகாதார செவிலியர்கள், பகுதி சுகாதார செவிலியர்கள் என பலர் கலந்து கொண்டனர். இதை எடுத்து பொதுமக்கள் பலர் ஆர்வத்துடன் வந்து தடுப்பூசியினை போட்டு செல்கின்றனர்.

    Next Story
    ×