search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ரத்ததான முகாம்
    X

    ரத்ததான முகாம் நடந்தது.

    ரத்ததான முகாம்

    • முன்னாள் ராணுவ வீரர்கள் 25 பேருக்கு சால்வை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
    • பள்ளி மாணவர்களுக்கு கலை நிகழ்ச்சிகள் மற்றும் போட்டிகள் நடத்தப்பட்டு பரிசு வழங்கப்பட்டது.

    திருத்துறைப்பூண்டி:

    திருத்துறைப்பூண்டி டெல்டா ரோட்டரி சங்கம் சார்பாக சுதந்திர தினத்தையொட்டி வி.ஐ.ஏ ஷிப் கேட்டரிங் கல்லூரி ரோட்ராக்ட் சங்கத்துடன் இணைந்து கல்லூரி வளாகத்திலும் அதனைத் தொடர்ந்து மணி பல்நோக்கு மருத்துவமனை வளாகத்திலும் டெல்டா ரோட்டரி சங்க தலைவர் ரமேஷ் இனிப்பு வழங்கினார்.

    தொடர்ந்து முன்னாள் ராணுவ வீரர்கள் 25 பேருக்கு சால்வை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. பள்ளி மாணவர்களுக்கு கலை நிகழ்ச்சி மற்றும் போட்டிகள் நடத்தி பரிசு வழங்கப்பட்டது.

    திருத்துறைப்பூண்டி டெல்டா ரோட்டரி சங்கத்தின் தொடர் சேவை திட்டமான ரத்ததான முகாம் திருவாரூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மற்றும் காந்தி கருணை மருத்துவ சேவை மையத்துடன் இணைந்து மணி மருத்துவமனையில் நடைபெற்றது.

    இதில் தன்னார்வலர்கள் 35 நபர்கள் கலந்து கொண்டு ரத்த தானம் கொடுத்தனர். இந்நிகழ்ச்சிக்கு டெல்டா ரோட்டரி சங்க தலைவர் ரமேஷ் தலைமை தாங்கினார் செயலாளர்ராஜதுரை பொருளாளர் அகிலன், மாவட்ட மருத்துவ சேர்மன் மணி பல்நோக்கு மருத்துவமனை இயக்குனர் மருத்துவர் பாபு, மண்டலம் 25ன் உதவி ஆளுநர் சிவக்குமார் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×