என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
சங்கரன்கோவில் ஆடித்தபசையொட்டி நெல்லை மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அளிக்க பா.ஜனதாவினர் கோரிக்கை
- பிரசித்தி பெற்ற சங்கரன்கோவில் சங்கர நாராயணசாமி கோவில் ஆடித்தபசு திருவிழா நாளை மறுநாள் (புதன்கிழமை) கொண்டாடப்படுகிறது.
- ஆடித்தபசு திருவிழாவையொட்டி நெல்லை மாவட்டத்துக்கும் உள்ளூர் விடுமுறை அளிக்க வேண்டும்.
நெல்லை:
பாரதீய ஜனதா கட்சியின் ஆன்மீக மற்றும் கோவில் மேம்பாட்டு பிரிவு மாவட்ட தலைவர் சங்கர சுப்பிரமணியன், துணைத் தலைவர் சுப்பிரமணியன், மாவட்ட செயலாளர் விஜயா, நந்தினி குமார் ஆகியோர் கலெக்டர் அலுவலகத்தில் ஒரு மனு அளித்தனர். அதில் கூறியிருப்பதாவது:-
பிரசித்தி பெற்ற சங்கரன்கோவில் சங்கர நாராயணசாமி கோவில் ஆடித்தபசு திருவிழா நாளை மறுநாள் (புதன்கிழமை) கொண்டாடப்படுகிறது.
வழக்கமாக இந்த திருவிழாவில் நெல்லை மாவட்டத்தில் இருந்து திரளான மக்கள் கலந்து கொள்வார்கள். இதையொட்டி சிறப்பு பஸ்களும் இயக்கப்படும்.
கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா பரவல் காரணமாக பக்தர்கள் இல்லாமல் திருவிழா நடைபெற்றது.
இந்த ஆண்டு பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ள நிலையில், திருவிழாவில் கலந்து கொள்வதற்காக ஏராளமான பொது மக்கள் செல்வார்கள். எனவே ஆடித்தபசு திருவிழாவையொட்டி நெல்லை மாவட்டத்துக்கும் உள்ளூர் விடுமுறை அளிக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
இதே கோரிக்கையை வலியுறுத்தி இந்து அன்னையர் முன்னணி மாவட்ட தலைவி குருவம்மாள் தலைமையிலும் மனு அளிக்கப்பட்டது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்