search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மங்கலம் ஊராட்சியில் முழு சுகாதார திட்டம் குறித்த விழிப்புணர்வு ஊர்வலம்
    X

    விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்ற காட்சி.

    மங்கலம் ஊராட்சியில் முழு சுகாதார திட்டம் குறித்த விழிப்புணர்வு ஊர்வலம்

    • மங்கலம் ஊராட்சியில் வீட்டுக்கு வீடு கழிவறை பயன்படுத்த வேண்டும் போன்ற சுகாதார திட்டம் குறித்த விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது.
    • மங்கலத்தில் துவங்கி முக்கிய வீதிகள் வழியாக சென்று பின்னர் ஆர்.பி.நகரில் முடிவடைந்தது.

    மங்கலம் :

    மங்கலம் ஊராட்சியில் வீட்டுக்கு வீடு கழிவறை பயன்படுத்த வேண்டும் ,தனி நபர் உறிஞ்சுகுழி பயன்படுத்த வேண்டும் , வீட்டிற்கு வடிகால் அமைக்க வேண்டும் , மரங்கள் நடவேண்டும், குப்பை தொட்டிகளை பயன்படுத்த வேண்டும் என்பது போன்ற முழு சுகாதார திட்டம் குறித்த விழிப்புணர்வு ஊர்வலம் மங்கலத்தில் நடைபெற்றது.

    இந்த ஊர்வலமானது மங்கலத்தில் துவங்கி முக்கிய வீதிகள் வழியாக சென்று பின்னர் ஆர்.பி.நகரில் முடிவடைந்தது. இதில் மங்கலம் ஊராட்சி மன்றத்தலைவர் எஸ்.எம்.பி.மூர்த்தி, மங்கலம் ஊராட்சி மன்றதுணைத் தலைவர் தாஹாநசீர், திருப்பூர் ஒன்றிய குழு உறுப்பினர் ஜானகி எபிசியன்ட்மணி, மங்கலம் ஊராட்சி செயலாளர் ரமேஷ்,மங்கலம் ஊராட்சி மன்ற வார்டு உறுப்பினர்கள் ரபிதீன், நட்ராஜன், முகமது இத்ரிஸ், ரேவதி முருகன், எஸ்.டி.பி.ஐ. கட்சியை சேர்ந்த அபுதாஹிர், தமிழ்நாடு முஸ்லீம் முன்னேற்ற கழகம் கட்சியை சேர்ந்த நிஷாந்த் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×