என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
உலக புலிகள் தினத்தை முன்னிட்டு அம்பையில் விழிப்புணர்வு பேரணி
- அம்பாசமுத்திரம் பகுதியில் புலிகள் பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.
- பள்ளி மாணவ, மாணவிகள் பதாகைகள் ஏந்தியும், கோஷங்கள் எழுப்பியும் பேரணியாக வந்தனர்.
கல்லிடை:
உலக புலிகள் தினம் ஒவ்வொரு ஆண்டும் ஜூலை 29 அன்று கொண்டாடப்பட்டு வருகின்றது. இதனை முன்னிட்டு அம்பாசமுத்திரம் பகுதியில் புலிகள் பாதுகாப்பு விழிப்புணர்வு குறித்த பேரணி நடைபெற்றது.
அம்பை வனச்சரக அலுவலகம் முன்பு இருந்து தொடங்கிய பேரணி தாலுகா அலுவலகம், ஒருங்கிணைந்த நீதிமன்றம் வழியாக பூக்கடை பஜாரில் திரும்பி தீர்த்தபதி மேல்நிலைப்பள்ளி, கலைக்கல்லூரி, வழியாக சென்று வனத்துறை துணை இயக்குனர் அலுவலகத்தை அடைந்தது, பேரணியில் வனத்துறையினர் ஒலிம்பிக் தீபம் ஏந்தி தொடர் ஓட்டமாக கொண்டு வந்து ஏற்றினர்.
இதில் கல்லிடைக்குறிச்சி திலகர் வித்யாலயா மேல்நிலைப்பள்ளி, அம்பாசமுத்திரம் தீர்த்தபதி மேல்நிலைப்பள்ளி, மெரிட் மேல்நிலைப்பள்ளி, வேல்ஸ் வித்யாலயா பள்ளி, கேம்ப்ரிட்ஜ் பள்ளி மாணவ, மாணவிகள், கலந்து கொண்டு புலிகளின் முக்கியத்துவம், வனப் பாதுகாப்பின் அவசியம், மரம் நடுதலின் அவசியம் பற்றிய பதாகைகள் ஏந்தியும், கோசங்கள் எழுப்பியும் விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக பேரணியாக வந்தனர். மேலும் புலிகள் தினத்தை முன்னிட்டு மாணவ- மாணவிகளுக்கு வனத்துறை சார்பில் நடைபெற்ற ஓவிய போட்டியில் வரையப்பட்ட ஓவியங்கள் வன உயிரினக்காப்பாளர் அலுவலகம் முன்பு பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டிருந்தது. பின்னர் பயிற்சி வனச்சரகர் கிருத்திகா புலிகளின் எண்ணிக்கை அதன் குணாதியங்கள், வனப் பாதுகாப்பு விபரங்களை தெரிவித்து பேரணியில் கலந்து கொண்டவர்களுக்கு நன்றி தெரிவித்தார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்