search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பூட்டை உடைத்து வீட்டில் கொள்ளை முயற்சி
    X

    கொள்ளை நடத்த வீட்டில் போலீசார் விசாரணை நடத்திய காட்சி.

    பூட்டை உடைத்து வீட்டில் கொள்ளை முயற்சி

    • சேலம் திருவாகவுண்டனூரில் வீட்டின் பூட்டை உடைத்து கொள்ளை அடிக்க முயற்சித்தனர்.
    • வீட்டில் 5 ஆயிரம் ரூபாய் மட்டும் வைத்திருந்ததாகவும், வேறு ஏதும் விலை மதிப்பு மிக்க பொருட்கள் இல்லை என்றும் கூறி உள்ளார்.

    சேலம்:

    சேலம் திருவாகவுண்டனூர் மேத்தாநகரில் வசித்து வருபவர் குணசேகரன் (வயது 60). இவர் திருச்சி பால் பண்ணையில் பணி புரிந்து ஓய்வு பெற்றவர். கடந்த 5 நாட்களுக்கு முன்பு திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் சென்று விட்டார்.

    இந்த நிலையில் வீட்டில் முன்பக்கம் உள்ள மதில் சுவரின் கேட்டின் பூட்டு உடைக்கப்பட்டு கிடந்தது. மேலும் வீட்டின் முன் கதவும் உடைக்கப்பட்டு திறந்து கிடந்தது. இதனை பார்த்த அந்த பகுதியினர் குணசேகரனுக்கு தகவல் தெரிவித்தனர். மேலும் சூரமங்கலம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

    உடனே அங்கு விரைந்து சென்ற போலீசார் சம்பவம் குறித்து விசாரணை நடத்தினர். பின்னர் குணசேகரனிடம் தொடர்பு கொண்டு போலீசார் பேசிய போது வீட்டில் 5 ஆயிரம் ரூபாய் மட்டும் வைத்திருந்ததாகவும், வேறு ஏதும் விலை மதிப்பு மிக்க பொருட்கள் இல்லை என்றும் கூறி உள்ளார்.

    அவர் வந்தால் தான் வீட்டில் உள்ள பணம் திருடு போனதா , என்பது தெரிய வரும் என போலீசார் தெரிவித்தனர். தொடர்ந்து சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    Next Story
    ×